Pages

March 20, 2014

வசந்தம் வந்தது




வண்ணக் கதிரவன் ஒளியொடு
வான் உயர்ந்த மரமெல்லாம்
வான் மறைந்துத் துளிர்த்து நிற்ப
வசந்தம் வந்தது
வண்ணக் கதிரவன் ஒளியொடு

பூ மகள் மேனிதனை
பூக்கள் மறைத்து நிற்க
பாரே அழகில் மிதக்குது
பகலவன் சிந்தும் புன்னகையில்

இத்தனையும் பார்க்கையிலே
மனசெல்லாம் ஒரு தவிப்பு - எம்
தாய்மண்ணின் பிறந்ததற்காய்
தம் வசந்தம் தொலைத்து வாழும் - எம்
தொப்புள் கொடி உறவுகள் வாழ்வில்
தொலைந்த வசந்தம் வீசும் நாள் எந்நாளோ???
.

March 18, 2014

தடம் மாறிப் போகோம்.

தடம் மாறிப் போகோம்.


தமிழனாய் பிறந்ததால் - நாம்
தடம் மாறிப் போகோம்
நல் தலைவனை
நம் வழிகாட்டியாய் கொண்டதால்
நாம் என்றும் வழி மாறி
நகரோம்
நாட்டினை பிரிந்து வாழ்ந்தாலும்
நாட்டிய ஆணிவேர்
இன்னும் உக்காமல்
ஆழமாய் அங்குதான்
அகல வேர் பரப்பி நிற்கின்றது.
ஆதலால்
நரை வீழ்ந்து
நடை தளர்ந்து போனாலும்- நாம்
தடம் மாறிப் போகோம்.

18.03.2014
‪#‎ஈழத்துப்பித்தன்‬