Pages

September 11, 2017

போர்க்கால நினைவுகள்

ஆண்டு ஐந்து தமிழ்ப்புத்தகத்தில்

"அம்மா நான் விளையாடப் போறேன்
அன்புடன் பட்சணம் தந்தனுப்பென்னை
சும்மா நான் உக்கார மாட்டேன்
நல்ல தோழர் அழைக்கின்றார்
நாழிகை ஆச்சு

பூப்பறித்தாடலாம் பூரதம் கட்டலாம்.....

இப்படித் தொடங்கும் பாடலொன்று பாடமாக இருந்தது. இதன் முழுமைவடிவத்தை கூகிள் ஆண்டவரிடம் நேர்த்தி வைச்சு தேடினேன் கிடைக்கவில்லை நினைவில் இருந்ததை எழுதியுள்ளேன் மிகு நினைவுள்ளவர்கள் தொடர்ந்து எழுதவும்.

அந்தகால கட்டம் போர் எம்மை தின்றுகொண்டிருந்த காலம். அதனால் விளையாட்டுகள் எம் அன்றாடச் செயற்பாடுகள் சிந்தனை அத்தனையிலும் போரும் அதன் தாக்கமும் பரவிக்கிடந்தது.

கள்ளன் பொலிஸ் விளையாட்டு ஆமி புலி என்றானது. கிறிக்கட் பற் வெட்ட பயன்படுத்திய தென்னம்மட்டைகளிள் AK 47 உருவானது. பப்பாக்குழனின் உதவியோடு மிசின் கண் உருவானது. எங்கள் ஊரின் புகையிலை குடில்கள் பாதுகாப்பு அரண்களாகவும் புகையிலை கிடங்குகள் பதுங்குகுழிகளாகவும் ஆகின. கோட்டையை பிடித்தல். பலாலியை பிடித்தல் என விளையாட்டின் எல்லைகள் நிர்ணயிக்கப்படும். கொப்பேகடுவாவும் கிட்டுவும் விளையாட்டு வீரர்களின் பெயராகும். விளையாட்டுக்கூட போர்க்கால சிந்தனையை கொண்டிருந்த காலம்.

பாடல்கள் கூட மாற்றியமைக்கப்பட்டு போர்க்கால எண்ணங்களோடு பாடப்பட்ட காலம். அந்தக்காலப் பகுதிகளில் மேற் கூறிய பாடலும் எம்மால் காலத்துக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கப்படது.

"அம்மா நான் போராடப் போறன்
கையில் ஆம்சொடு கிறினெட்டும் தந்தனுப்பென்னை
சும்மா நான் உக்காரமாட்டேன்
நாலு ஆமியை சுடுகின்ற நேரம் இதுவெல்லோ...."

#போர்க்கால_நினைவுகள்

No comments:

Post a Comment

தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.