Pages

April 29, 2024

சுவிற்சர்லாந்தில் “கலாநிகேதன்” 33 ஆண்டுகள்

 இன்று உலக நடன தினம்

நேற்றைய தினம் (28.04.2024) சுவிற்சர்லாந்தின் பாசல் மாநிலத்தை மையமாகக்கொண்டு சுவிற்சர்லாந்தின் பல பாகங்களிலும் பரதக்கலையை கற்பித்து வரும் “கலாநிகேதன் நடனாலயம்” தனது 33வது ஆண்டு விழாவை பாசல் மாநிலத்தில் கொண்டாடியது.

சுவிற்சர்லாந்துக்கு புலம் பெயர்ந்த தமிழர் அந்தந்த நாடுகளில் தங்கள் தடங்களை பதிக்க முனைந்த காலங்களில் தோற்றம்பெற்ற விடயங்களுள் கலாநிகேதன் நடனாலயமும் ஒன்று.

கலாநிகேதன் நாட்டியப்பள்ளி “நாட்டியக் கலைமணி” கிருஸ்ணபவானி சிறிதரன் அவர்களின் பெரும் முயற்சியாலும் அர்ப்பணிப்பாலும் உருவாகி இன்று மூன்று தசாப்பங்களை கடந்து நிற்கின்றது.

கலாநிகேதன் நடனாலயம் தனது முதலாவது “நாட்டியாஞ்சலி” நிகழ்வை 1995ம் ஆண்டின் இதே காலப்பகுதியில் செய்திருந்தது.அந்த நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய கஜேந்திரக் குருக்கள் ஒரு விடயத்தை பதிவாக்கியிருந்தார். அன்று அவர் உரையாற்றியதில் இருந்து என் நினைவுள் அழியாது பதிந்துள்ள ஒரு விடயத்தை முடிந்த வரை அப்படியே சொல்கிறேன். “இந்த பாசல் மாநிலம் மீது எனக்கு சற்றுப் பொறாமையாக இருக்கின்றது. தமிழர் சார்ந்த விடயங்களின் பதிவுகளில் பலவற்றை பார்த்தால் அதை முதலில் செய்தவர்கள் பாசல் மாநிலத்தவர்களாக இருக்கின்றார்கள். முதற் கோவில், முதற் தமிழ்ப் பாடசாலை அந்த வரிசையில் முதலாவது முழுநேர பரதநாட்டிய நிகழ்வு.” ஆம் சுவிற்சர்லாந்தில் முதலாவது முழு நேர பரதநாட்டிய நிகழ்வான “நாட்டியாஞ்சலி” நிகழ்வை நடத்திய பெருமையும் வரலாறும் “கலாநிகேதன்” நாட்டியப்பள்ளிக்கு உண்டு. அந்த நிகழ்வில் “கலாநிகேதன்” நடனாலயம் சார்ந்த நன்றியுரையினை வழங்கும் வாய்ப்பை ஆசிரியை எனக்கு வழங்கியிருந்தார். பாடசாலை நிகழ்வு, போட்டி நிகழ்வுகள் கடந்து நான் ஏறிய முதலாவது வெளி மேடை அதுவாகும்.

பரதக்கலையை அதன் மரபு மீறாதவகையில் கற்பிக்கும் அதேவேளையில் காலத்துக்கு ஏற்ற வகையில் நாட்டிய அடவுகளினூடாக எம் தேசத்தின் வலி, போர் அதற்கான எழுச்சி்யையும் வெளிக்கொணரத் தவறவில்லை. 

சுவிற்சர்லாந்தில் “கலாநிகேதன்” முத்திரை பதிக்காத மேடைகளே இல்லை எனலாம்.

“நிருத்திய மாலை” என தனது பத்தாவது அகவையையும் கொண்டாடிய கலாநிகேதன் இன்று 33 ஆண்டுகளை எட்டி தமிழர்கள் மத்தியில் மட்டுமல்லாது பல்லின மக்களிடையேயும் பரதக்கலையை கற்பிக்கும் நாட்டியப்பள்ளியாக வளர்ந்து நிமிர்ந்து நிற்கின்றது.  

சுவிற்சர்லாந்தில் பல இரண்டாந்தலைமுறையை சேர்ந்தவர்களை உருவாக்கி அவர்களை ஆசிரியர் தரம் வரை உயர்த்தி இன்று மூன்றாந்தலைமுறையினருக்கும் கற்பிக்கும் நாட்டியப்பள்ளியாக நிமிர்கின்றது.

33வது அகவையை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட “நாட்டியாஞ்சலி” நிகழ்வு மிகச் சிறப்பாக மண்டபத்தையும் மீறிய கொள்ளளவுடன் நடைபெற்று நிறைவடைந்திருந்தது. நீண்டகாலத்துக்குப் பின் மனநிறைவான முழுநேர நாட்டிய நிகழ்வினைப் பார்த்த திருப்தி.

மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் அன்ரி ❤️

Krishnabavani Sritharan





March 1, 2024

அக்காப் பிள்ளை அம்மா

 செய்தி கேட்ட கணம் முதலாய்

சேயைத் தேடிய தாய் தான்

சிந்தை எங்கும் வந்து போகின்றாள்

அக்காப் பிள்ளை அம்மா

ஆரோ பெத்த பிள்ளை என்னைக் கண்ட போதே

உச்சி மோந்து எஞ்சில் ததும்ப முத்தம் தந்து

உவகை கொண்டு உருகி நின்றவள்

பெத்த பிள்ளை தன்னை காண வருவானென்று

எத்தனை ஆண்டாய்க் காத்திருந்தவள்

கண்டிருந்தால் எப்படி எல்லாம் அணைத்து மகிழ்ந்திருப்பாள்.

எல்லாம் கானலாகிப் போனதுவே



January 12, 2023

உலாத்தலும் உறவுகளும்

இது எனக்கு மூன்றாவது நோர்வே பயணம்இந்தப் பயணத்தை நிறைவாக்கிய பெரும் பங்கு தம்பி சயனுக்குஉண்டு.


சயன் பேஸ்புக் ஊடாக அறிமுகமாகி முதன் முறையாக 2019 இல் தாய்லாந்தின் பாங்கொக் நகரில் குடும்பமாகசந்தித்த உறவு


"மயூரன் அண்ணாஎன்று அழைக்கும் போதே அவனது அன்பை உணர முடியும்இன்னொரு தடவை அழைக்கமாட்டானா என மனம் ஆசைப்படும்


இம் முறை பயணத்தில் அவனே என்னை விமான நிலையத்தில் வந்து அழைத்துச் செல்வதாக திட்டமிடப்பட்டதுநான் சென்ற நாளில் ஏற்பட்ட அதீத பனிப்பொழிவு வாகன போக்கு வரத்துக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியதுசயனின் வாகனமும் பனியில் சிக்குண்டு வெளி வர பெரும் பொழுது தேவைப்பட்டதுநான் தொடரியில் ஒஸ்லோவருவதாக கூறினேன்அதற்கிடையில் பரணி அண்ணா என்னை விமான நிலையத்தில் இருந்து  என்னைஅழைத்துச் சென்றுவிட்டார்.


சயன் அங்கு வந்து என்னை பொறுப்பேற்று எனக்கு மிகவும் பிடித்தமான ஒஸ்லோ முருகனை தரிசிக்கஅழைத்துச் சென்று அங்கு ஆலய நிர்வாகத்தால் என்னை மதிப்பளிக்க வைத்து மான்புற வைத்தான்


தங்கள் வீட்டிலையே நான் தங்குவதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து தந்தான்சயனின் துணைவியார்சுவையான உணவுகளை தந்து சயனைப்போலவே ஒரு சொந்த அண்ணனை கவனிப்பது போல்கவனித்துக்கொண்டார்பிள்ளைகளும் இயல்பாக பழகி மகிழ்ந்தார்கள்


நான் சந்திக்க விரும்பிய என்னை சந்திக்க விரும்பிய உறவுகளை எல்லாம் நேரம் ஒழுங்குபடுத்தி சந்திக்கவைத்த பெரும்பணி சயனையே சேரும்கொட்டும் பனிக்கு மத்தியிலும் வழுக்கும் வீதிகளிலெல்லாம் பக்குவமாகவாகனத்தை ஓட்டி அழைத்துச் சென்றான்சயன் பக்குவமா அழைத்துச் சென்றும் நானாக ஒரு தடவை வழுக்கிவிழுந்தது வேறு கதை.


எனது இந்த பயணத்தை சயன் இன்றி என்னால் இலகுவாக்கியிருக்க முடியாது என்பதே உண்மை


என்றோ ஒருநாள் நான் எனக்கு பிடித்த நோர்வேஜிய இனிப்புப் பண்டங்கள் பற்றி பதிவிட்டதை நினைவில்வைத்து அவற்றையும் வாங்கித் தந்து வழியனுப்பி வைத்தான்.


இத்தகைய உறவுகள் அமைந்தது இறையருள் அ்ன்றி வேறில்லை.


தொடரட்டும் இதுபோன்ற நல்லோர் நட்பு.

November 22, 2022

இயற்கையின் வணக்கம்


 எங்கள் தேசம் மட்டுமல்ல

எல்லாத் தேசமும் உங்களுக்காய்

சிவப்பும் மஞ்சளுமாய்

சிங்காரித்து நிற்கின்றன


வார்த்தைகளால் உங்களை நான்

வணங்கவும் தடை

சொற்கள் பார்த்து கோர்த்துதான்

சோதியானவர்களே உங்கள் புகழ் பாடும் நிலை


இயற்கை என் நிலை அறிந்து

இலை இதழ்களில் வர்ணம் தீட்டி

என் உள உணர்வினை 

எடுத்துச் சொல்கிறாள் இங்கு


#ஈழத்துப்பித்தன்

22.11.2022

கச்சானும் கனித்தோடையும்


 நிலக்கடலைக்கும் தேன் தோடைக்குமான கூட்டணியை குளிர் காலம் ஆரம்பிக்கும் காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் உணரமுடியும்.

அலுவலகங்கள், உணவகங்கள், வீட்டு வரவேற்பறை என எங்கும் இந்தக் கூட்டணியை காண முடியும். அதுவும் நத்தார் காலம் நெருங்கும் பொழுது இந்தக் கூட்டணியின் ஆதிக்கமும் அதிகரிக்கத் தொடங்கிவிடும். 

குளிர் காலத்தில் குளிரின் தாக்கத்தில் இருந்து எம்மை காத்துக்கொள்ள தேவையான கொழுப்புச்சத்தினையும் புரத த்தினையும் நிலக்கடலை தாராளமாகத் தருகின்றது. அதே போல் தேன்தோடை உடலுக்கு தேவையான உயிர்ச்சத்து c யினை அதிகம் தருகின்றது. இது குளிர்காலத்தில் ஏற்படும் சளித்தொல்லையில் இருந்தும் தடிமன் வராமலும் இருக்க உதவுகின்றது.

இரண்டையும் கலந்து சுவைத்தல் அபரிதமான சுவையாக இருக்கும்.

சுவைத்துப் பாருங்கள்.

கண்டனக்கவி

(சுவிற்சர்லாந்தில் வாழும் கவிஞர் 

ஒருவரின் அரங்க வெளிப்படுத்தலுக்கான என் பதில்.

இதனை சொல்லாது போனால் அவர் கூற்றுக்கு அங்கிருந்த நானும் துணையானவனாவேன்.)


அத்தனையும் முடிந்தது  என்ற பொழுதில்

விட்டு விட்டு ஓடியவரே

நீங்கள் 

பட்ட கடனும் சேர்த்து

படாத பாடு பட்டு

வட்டியோடு கட்டி வைத்தவர்கள் அவர்கள்

சரி் பிழை உண்டென்றாலும்

சகதியை வாரி இறைக்கும் உரிமை உமக்கில்லை

வாய் உள்ளது என்பதற்காகவும்

வல்ல தமிழ் துணை உள்ளது என்பதற்காகவும்

வசை பாடி விட்டு நீர் செல்ல  

கேட்டு கைதட்டி குதூகலித்து

வாய் மூடி இருப்பதற்கு நானும் 

மற்றவர் போல் அல்ல

புவிப் பந்தில் எனக்கும் அடையாளம் தந்தவன்

உமக்கு அடையாளம் தந்த அதே

பு லித்தாய் கருச் சுமந்து புறம் தள்ளியவன்தான்

விழி் நிமிர்த்தி பார்த்தோம் உங்களை - உங்கள்

வழி மீது தடம் பதித்தும் நடந்தோம்

வீணானவர்கள் நீங்கள் என்று நாம் 

எண்ணும் வகையில்

விடங்களை மனங்களில் பரவி விடாதீர்

வீணான வார்த்தைகளால் கல்லெறிந்து

மீண்டும் மீண்டும் குளங்களை குழப்பாதீர்

சீ இவர்கள் சில்லறைகள் என்று

உமை நோக்கி வாய் உமிழ வைத்துவிடாதீர்

பொது எதிரியை கை விட்டு விட்டு

கூடித் திரிந்தவனுக்கு சாபமிடாதீர்

அந்த அரங்கிலே பதில் சொல்லும் 

திடம் எனக்கு இருந்தாலும்

அரங்கை காக்கும் பொறுப்பு என் 

கரங்களில் இருந்ததால்

நாவடக்கிக் கொண்டேன்.

உடைத்தெறிவது சுலபம்

உருவாக்கி எடுப்பதுவே கடினம்

வல்லமை உண்டெனில் வாய் வீரம் காட்டாமல்

செயல் வீரராய் வாருங்கள்

சேர்ந்து வடம் பிடிப்போம்


#ஈழத்துப்பித்தன்

21.11.2022

November 19, 2022

ஈழத்தின் தொன்மையான இணுவை.


விஜயன் வருகைக்கு முன்னரே தமிழர் ஈழத்தை ஆண்டனர். ஆதாரங்கள் இணுவிலில்.


குமரிக்கண்டத்தில் அமைந்த தமிழ்ச் சங்கங்களில் ஒன்று இணுவிலில் அமைந்திருந்ததாகவும் அதன் எச்சங்கள் மண்ணுள் புதைந்துள்ளதாகவும் அவற்றை இன்றும் பூதங்கள் காப்பதாகவும் சிறு வயதில் மூத்தவர்கள் காவி வந்த செவி வழிச் செய்திகளினூடாக அறிந்துள்ளேன். 


அதனால்தான் அந்த மண்ணில் வேறெங்கிலும் இல்லாத அளவில் தமிழும் சைவமும் செழித்து வளர்வதாகவும், சிவனின் ஆட்சி நிலவும் சிவபூமியாக திகழ்வதாகவும் குறிப்பிடப்படுகின்றது. 


இன்று பார்த்தால் கொழும்பு தமிழ்ச் சங்கம் உட்பட உலகம் முழுவதிலும் தமிழ் சார் அமைப்புக்களையோ சைவ ஆலயங்களையோ நிறுவி தமிழ் சைவ பணிகள் தொடர வழி வகுப்பதில் முன் நிற்பவர்கள் இவ்வூரவர்களே.

அதனை மெய்ப்பிக்கும் வகையில் இணுவிலின் காரைக்கால் சிவன் கோவில் பகுதியில் அண்மையில் கேணி அமைக்க முயன்றபொழுது சிக்கிய கட்ட எச்சங்களும் தொல்பொருட்களும் அமைந்துள்ளன.

பல்லவர்களாலும் சோழர்களாலும் பராமரிக்கப்பட்ட பல்லாயிரம் ஆண்டு கடந்த காரைக்கால் சிவன் கோவில் வளாகத்திலேயே இத் தொல்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. இக்கோவில் பகுதி சித்தர்கள் வாழும் பகுதி எனப்படும். 

அந்தப் பகுதிக்குள் நுழைகின்ற போதே ஒரு பரவச நிலையையும் மன அமைதியும் ஒட்டிக்கொள்ளும். பல அற்புதங்களை நிகழ்த்திய அப் பகுதி இன்று பல அற்புதங்களை வெளிக்கொணரும் பகுதியாக ஈழத்தமிழர்களின் தொன்மத்தை மீட்கும் பகுதியாக அமைந்துள்ளது.

இந்த பகுதி என் தந்தை மற்றும் தாயார் வழி மூதாதைகள் பிறந்து வளர்ந்த பகுதி என்பதிலும் நாம் சிறுவயதில் உருண்டு புரண்ட பகுதிகள் என்பதிலும் பெருமையும் மகிழ்வும். 

#இணுவையூரான்

https://youtu.be/4O8V3tFn9GQ 

November 7, 2022

எழுச்சிக்கவி தெரிவுப் போட்டியில்...

 

இன்று தமிழீழ நினைவேந்தல் அகவத்தினால் சுவிஸ் தழுவியரீதியில் மா. வீரர் நினைவு சுமந்த கவிதைப் போட்டி எட்டாவது தடவையாக பேர்ண் மாநிலத்தில் நடாத்தப்பட்டது. 

இந்த போட்டிகளில் நான்கு பிரிவுகளில் சுமார் 47 போட்டியாளர்கள் பங்கேற்றார்கள். 

இதில் அதிமேற்பிரிவில் முதலிடத்தை பெறும் போட்டியாளருக்கு "எழுச்சிக்கவி" விருது வழங்கப்படும்.

இவ்வாண்டு நடைபெற்ற போட்டியின் நடுவர்களில் ஒருவராக கலந்து சிறப்பிக்கும் வாய்ப்பினை சுவிஸ் கிளையின் மா. வீரர் நினைவு அகவம் எனக்கு வழங்கியிருந்தது.

கடந்த ஆண்டே நினைவேந்தல் அகவத்தின் ஒருங்கிணைப்பாளர் மதியண்ணாவும் மதிப்பிற்குரிய சிவலோகநாதன் அண்ணாவும் அழைத்திருந்தார்கள். நான் பின்னின்றபோது நம்பிக்கையும் உற்சாகமும் தந்து உங்களைப் போன்ற இளையவர்கள் வர வேண்டும் அன்புக்கோரிக்கையை முன் வைத்தார்கள்.  சில தவிர்க்க முடியாத காரணத்தால் கடந்த தடவை என்னால் இறுதிக்கணத்தில் கலந்துகொள்ள முடியாது போய்விட்டது.

இம் முறை இவர்களெல்லாம் தந்த நம்பிக்கையை ஏற்று கலந்து கொண்டேன்.  

ஏற்கனவே பல பேச்சுப்போட்டிகள் மற்றும் தமிழ்த் திறன் போட்டிகளுக்கு நடுவராக சென்றிருந்தாலும் கவிதைப் போட்டிக்கு இதுவே முதற் தடவை. போட்டியாளர்களை விட என் மனம் பதை பதைப்பாக இருந்தது. தவறான முடிவுகளை கணித்துவிட்டால் அது திறமையானவர்களை புறம் தள்ளிவிடுமே என்ற பேரச்சம் மனம் முழுதும் நிலவியது.

போட்டியாளர்களை சீர்தூக்கவென லண்டனில் இருந்து நான் பெரிதும் மதிக்கும் கவிஞர் ராஜமனோகரன் அவர்களும் மூத்த படைப்பாளி ஆதிலட்சுமி சிவகுமார் இணைந்திருந்தார்கள்.  இருவரும் இவர்களுடன் சுவிஸ் தமிழ்க் கல்விச்சேவையின் ஒருங்கிணைப்பாளர் பார்த்தீபன் கந்தசாமி அவர்களும் உற்சாகமூட்டி தரவுகளை தந்து வழிகாட்டினார்கள்.

போட்டியாளர்களுக்கு பிரிவுகளுக்கேற்ப 40 முதல் 60 நிமிடங்கள் குறிப்பிட்ட தலைப்புகளில் கவிதை எழுத நேரம் வழங்கப்படது.

அதனையடுத்து அரங்கில் கவிதைபாட நேரம் வழங்கப்பட்டது.

போட்டிகள் அனைத்துமே சிறப்பாக நடைபெற்று முடிவடைந்தது. 

முடிவுகள் எடுப்பதில் கடுமையான போட்டியாக இருந்தது. 

நிறைவில் எனக்கே ஆச்சரியமாக இருந்தது. எனது முடிவுகள் ஏனைய இரு நடுவர்களின் முடிவுகளுடனும் அச்சொட்டாய் பொருந்திப் போனது. 


யாருடைய திறமையையும் நான் தவறாக கணிக்கவில்லை என்ற மனநிறைவைத் தந்தது.


நடுவர்களாக கலந்துகொண்ட கவிஞர் இராஜமனோகரன் மற்றும் மூத்த படைப்பாளி ஆதிலட்சுமி சிவகுமார் ஆகிய பெரும் ஜாம்பவான்களோடு கத்துக்குட்டியான நானும்.

October 2, 2022

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் 




எனக்கு நன்றாக பிடித்துள்ளது.

1 குந்தவை

2 வந்தியதேவன்

3 அருண்மொழி

4 ஆதித்த கரிகாலன்

5 நந்தினி

இந்த வரிசையில் பாத்திரப் படைப்புகள் மனங்களில் நிறைகின்றன.

நாவல் திரைக்கதையாக மாறும் போது அதன் உருமாற்றம் எந்த வகையில் இருக்குமென்று எதிர்பார்த்தேனோ அதே போல் இருந்தது.

முதற் பாகத்திலேயே அருண்மொழிவர்மனை அறிமுகப்படுத்தி விட வேண்டும் என்ற நோக்கம் நாவலில் உள்ள கதை நகர்வை விரைவுபடுத்தியுள்ளது. கதையில் இரசித்த பல சம்பவங்கள் இல்லாமல் இருந்தாலும் ஏமாற்றத்தை தரவில்லை.

பொன்னி நதி பாடலின் காட்சிப்படுத்தல் பாடலை மனதோடு ஒட்டச் செய்கின்றது.

சோழா சோழா பாடல் அதற்கான காட்சிப்படுத்தலால் மனதோடு ஒட்டவில்லை. அந்தப் பாடலில் வரும் புலிக்கொடி கரிகாலன் போன்ற வார்த்தைகள் எம்மை எங்கோ கொண்டு செல்வதாலும் இந்தக் காட்சிப்படுத்தல் எம் மனதோடு ஒட்டாமல் போவதற்கான காரணியாக இருக்கலாம்.

குந்தவை - நந்தினி சந்திக்கும் காட்சி, அருண்மொழி, வந்தியதேவன் சந்திக்கும் காட்சிகளும் ஆதித்த கரிகாலனின் அறிமுகமும் மனதில் நிறைகின்றது.

கடற்சமர் மிரட்டிப் போகின்றது. 

தனிமனித வீரத்தை கொண்டாடும் பாகுபலியோடு ஒரு இனத்தின் புனைவுடன் கூடிய வரலாற்றை ஒப்பிட முடியாது. பாகுபலியை எதிர்பார்த்து போவோருக்கு இங்கு வேறுவிதமான அவலே காத்திருக்கின்றது.

மொத்தத்தில் பார்க்க கூடிய திரைப்படம்.