Pages

July 3, 2014

என்ன தவறு நான் இழைத்தேன்
























குடமுழுக்கு காணுகின்ற இணுவைக் கந்தா
மனம் முழுக்க உன் நினைப்பில் தவிக்கிறேன் நான்
காட்சிகள் ஒவ்வொன்றும் கணனித் திரை முன்னே
சாட்சியாய் விரிகையிலே மனசெல்லாம் ஒரு தவிப்பு
மஞ்சமதில் ஏறிவரும் மால் மருகா
நெஞ்சமெல்லாம் நிறைந்து நிற்கும் பேரழகா
என்ன தவறு நான் இழைத்தேன்;
எழிலோடு உருவான உன் கோவில் படி ஏறி
கும்ப நீரில் நீ குளிக்கும் கோலம்
கண்ணாரக் காணுகின்ற பேறிழந்து
கண்ணீர் மல்கி நிற்கின்றேன் நாம்.
தொலை தூரம் வாழ்வதனால்
தொலைந்ததுவே எல்லாம்
கடல் கடந்து வாழ்ந்தாலும்
கந்தா உனை மறவேன் - உங்கு
வந்து விடும் வரம் எனக்களித்தால்
வாசல் தேடி வந்து கும்ப விழா கண்டிடுவேன்.