Pages

December 29, 2020

இந்தியா நோக்கி முதலாவது உலாத்தல் பகுதி 2



பேஸ்புக்கை திறந்தபோது பேரதிர்ச்சி காத்துக் கிடந்தது. சென்னை நகரமே வெள்ளத்தில் மூழ்கிக்கொண்டிருக்கிறது என்ற செய்தியும் படங்களும் குறிப்பாய் விமான நிலையத்தினுள் புகுந்த வெள்ளக்காட்சிகளும் எங்கும் விரிந்து கிடந்தது.  எல்லாவற்றுக்கும் மேலாக பேஸ்புக் ஆய்வாளர்களின் சென்னை நகரை கடல் காவுகொள்ளப் போகின்றது என்ற ஆய்வுக்கட்டுரைகளும் பயங்காட்டிக்


பயணத்தை நிறுத்திவிடலாம் என்றாலும் பயணச்சீட்டுக்கு செலுத்திய பணமும் திரும்பாதே என்ற யோசனையாக இருந்தது. 

இரண்டு கிழமை இருக்கு, சரி ஊருக்குதானே; முதலில் அங்கு போவம் பிறகு நிலமையைப் பொறுத்து இந்தியப் பயணத்தை திட்டமிடுவோம் என முடிவெடுத்தாச்சு. 

இரண்டு வாரத்தில் சென்னையில் வெள்ளம் வடிந்து இயல்புக்குத் திரும்பியிருந்தது. நானும் திட்டமிட்டபடி கத்தார் வழியாக கொழும்பு நோக்கி எனது பயணத்தைத் தொடர்ந்தேன். 



பாபநாசம் திரைப்படத்தோடு கத்தார் விமானச்சேவையின் பயணம் தொடர்ந்தது. காலை ஐந்து மணிக்கு வேலை முடிய அப்படியே வந்து 6.00 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு சூரிச் விமான நிலையம் சென்று அங்கிருந்து காலை 10.00 மணிக்கு கத்தார் நாட்டின் டோகா நோக்கிப் பயணம் பின் அங்கிருந்து கொழும்பு இதுதான் பயணவழி. ஊர்போகின்றேன் என்ற நினைப்பு முதல் நாள் நித்திரை இல்லாத களைப்பும் தெரியாதளவு உற்சாகமாயிருந்தது. 


விமானப் பயணமும், மருத்துவமனையில் இருப்பதுவும் ஒரேமாதியான சிந்தனையோட்டமாக இருக்கும் எப்ப சாப்பாடு வரும்? என்ன சாப்பாடு வரும்? 

கத்தார் விமானச்சேவையில் தரமான சுவையான உணவுகள் தரப்பட்டன. அதுவும் டோகாவில் இருந்து கொழும்பு பயணிக்கும் விமானத்தில் தரப்பட்ட சிவப்புப் பச்சை அரிசியிலான பாற் சோறும், கோழிக்கறியும், கட்ட சம்பலும் மிகச் சுவையாக இருந்தது. 




விமானத்தையும் விட வேகமாக மனம் ஊர் நோக்கிப் பறந்து கொண்டிருந்தது. அதிகாலையில் கொழும்பு விமான நிலையத்தைச் சென்றடைந்தேன். தம்பி (சித்தியின் மகன்) அழைத்துச் செல்ல வந்திருந்தான். அன்றே இந்திய விசாவுக்கு விண்ணப்பித்துவிட்டு ஊருக்குச் செல்வதாகத் திட்டமிட்டிருந்தோம். இந்திய விசாவுக்கு விண்ணப்பிக்கச் சென்றபோது இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது...

இந்தியா நோக்கி முதலாவது உலாத்தல் 1

 


முதலாவது இந்தியப் பயணத்துக்கு... 1


டிசம்பர் முதலாந் திகதி  2015 அதிகாலை 11.00 மணிக்கு என் கைத்தொலைபேசி அலறியதுஎன்ன 11.00 மணிஅதிகாலையா் என்று நீங்கள் நினைப்பது புரிகின்றதும் அந்த நேரம் நான் இரவு வேலை செய்துகொண்டிருந்தேன்அதிகாலை 5.00 மணிக்குதான் வேலை முடியும்வந்து ஆறு மணிக்கு நித்திரைக்கு போனால்11.00 மணி என்பது அதிகாலைதானேம் தொலைபேசியை தூக்கிப் பர்த்தேன் என் வேலையிடத்திலிருந்துதொலைபேசி இணைப்பை ஏற்படுத்துவதற்கிடையில் ஆயிரம் எண்ண ஓட்டங்கள்


ஏற்கனவே ஒருவர் மருத்துவ விடுப்பில் நின்றதால் 14 நாட்கள் விடுமுறை இல்லாமல் தொடர் வேலைஇன்றுதான் 14 நாட்களுக்கு  பின் விடுமுறைநாளாக அமைந்ததுஅந்த விடுமுறைக்கும் ஆப்போ என்றமனச்சோர்வவோடே இணைப்பை ஏற்படுத்தினேன்வழமையான குசல விசாரிப்புக்களுக்குப் பின் பொறுப்பாளர்விடயத்துக்குள் நுழைந்தார்உனக்கு 5வாரமேலதிக விடுமுறை உள்ளதுஅதனை ஜனவரிக்குள் எடுத்து முடிக்கவேண்டும்அதனை நீ விரும்பினால் இன்றிலிருந்தே எடுத்துக் கொள்ளலாம் என்றுநான் முன்னர் வேலை செய்யஇடத்தில் மூன்று பேர் வேலைஎப்போதும் இருவர் சேர்ந்து வேலை செய்ய வேண்டும்நான்கு நாள் வேலைஇரண்டுநாள் விடுமுறை என அட்டவணை சுழலும்அதனால் நாம் எமக்கு நீண்ட விடுமுறைகள் தேவைப்படின்எங்கள் பொதுவிடுமுறையில் கை வைக்காமல் ஒவ்வொருவரின் அட்டவணையை அடுத்தவர் பொறுப்பேற்றுசெய்வோம்அதனால் எனக்கு ஆண்டுதோறும் நீண்ட நாள் விடுமுறை அடிக்கடி வரும்அந்த விடுமுறைகளுக்குஉலாத்திக் கொள்வேன்அதனால் பொதுவிடுமுறை அப்படியே சேர்ந்திருந்தது.


சரி அதற்காக இன்றிலிருந்தெல்லாம் விடுமுறை எடுக்கேலாது இரண்டு வாரத்தில் எடுக்கறேன் என முடிவைசொல்லிவிட்டு இணையத்தில் விண்ணூர்திக்கான பயணச் சீட்டுக்களை பார்க்கத் தொடங்கினேன்தமிழகம்போவதற்காக திட்டமிட்டேன்அந்த வேளையில் அம்மாவும் சகோதரியும் தமிழகம் சென்றிருந்தனர்அதே நேரம்2016 நடைபெறும் புத்தகக் கண்காட்சிக்கும் போய் வரலாம் என ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும்திட்டத்தோடுஆனால் அதிலும் ஒரு சிக்கல் இந்தியாவுக்கான உள் நுழைவு விசா எடுக்க வேண்டும்சுவிசில்விசாக்கு கொடுத்தால் இரண்டு வாரத்துக்கு மேலாகும் பின்னர் நத்தார் காலம் நெருங்கிவிடும்பயணச்சீட்டுக்கள்அதிகவிலையாயிருக்கும் அத்நோடு கிடைப்பதும் அரிது


சரி இலங்கை போய் அங்கே விசா எடுத்து இந்தியா போவதென திட்டமிடப்பட்டதுஉடனடியாக இலங்கைக்குவிமானச் சீட்டைப் பார்த்தேன் 14ந் திகதி புறப்படும் விமானத்துக்கு 850 சுவிஸ் பிராங்குக்கு விமானச் சீட்டுஇருந்ததுஉடனடியாக வங்கி மூலம் பணத்தைச் செலுத்தி  உறுதிப்படுத்திவிட்டேன்பயணம் உறுதிமற்றும்குறுகிய நாள் என்பதால் காப்புறுதி கூடச் செய்யவில்லைஎல்லாவற்றையும் முடித்துக்கொண்டு பேஸ்புக்கில்நுழைந்தேன்பேரதிர்ச்சியான செய்தி காத்துக்கிடந்தது....

December 10, 2020

காரிய விசருகள்...

 


இங்கு காரிய விசருகள் 
கனக்க உலாவுது
எட்டியும் உதைக்கேலாது
கட்டியும் பிடிக்கேலாது
கவனமாகத்தான் கையாள வேணும்.

காரிய விசருகள் 
கனவேலை செய்யுங்கள் 
கூரிய கத்திபோல் அதுகளை
கையாள வேணும்
நேரிய பார்வையோடு
இதுகளை நெருங்கவும் முடியாது

நாகு கண்ட காளைபோல் 
தலையாட்டியாட்டி நின்றே
காரியம் பார்த்திடுங்கள்
காரியம் முடிந்ததும்
கூரிய கத்தி கொண்டு
நெஞ்சினில் பாய்ச்சிடுங்கள்

நம்பினால் நட்டாற்றில்
விட்டிடுங்கள் 
எதிர்பாரா வேளையில் 
மாடியிலிருந்து பிடித்துத் 
தள்ளுவது போல்
பொறுத்த நேரத்திலே
மனத்தை உடைத்திடும்
வேலையும் பார்த்திடுவார்

இங்கு
காரிய விசருகள் இங்க 
கனக்க உலாவுது...
கவனமாகத்தான்
கையாளவேணும்...

#ஈழத்துப்பித்தன்
16.07.2020


December 6, 2020

கச்சல் கோப்பியும் காச்சின கசிப்பும்

 கச்சல் கோப்பியும் காச்சின கசிப்பும்

**********************************



நேற்று சுவிற்சர்லாந்தின் மத்தியில் அமைந்துள்ள கிராமமொன்றுக்கு சென்றிருந்தேன். அழகான விவசாயக் கிராமம்.

ஏற்கனவே மூன்று தடவை அந்த இடத்துக்கு சென்றிருக்கிறேன். ஒரு தடவை வசந்தகாலத்தின் ஆரம்பநாட்களிலும் இரண்டாவது தடவை கோடையின் இறுதிக்காலத்திலும் நேற்று பனிக்காலத்தின் ஆரம்பத்திலும் சென்றிருந்தேன். ஒவ்வொரு காலத்துக்கும் அந்தந்தக்காலத்துக்கான அழகோடு அந்தப் பகுதி மிளிரும்.

நான் சென்ற இடம் ஒரு விவசாயக் குடும்பத்தின் பண்ணை. பரந்து விரிந்த வயலின் நடுவே அந்த பண்ணை வீடு அமைந்துள்ளது. கடந்த தடவை சென்றபோது அறுவடைக்கு தயாராயிரிந்த சோளமும், கோதுமையும் இம்முறை அறுவடை செய்யப்பட்டு வயல்வெளி கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெறுந் தரையாகக் கிடந்தது. பண்ணை வீட்டோடு உள்ள தொழுவத்தில் ஆடு, மாடு, குதிரை, முயல் போன்ற வீட்டு விலங்குகள் வளர்க்கப்படுகின்றன. 

அதன் அருகேயுள்ள குடியிருப்பில் தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்து வரும் அந்தக் குடும்பம் மூன்று தலைமுறை உறுப்பினர்களோடு கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகின்றார்கள். தற்போதய பண்ணையை நிர்வகிக்கும் விவசாயியான தோமாஸ் அவரது மனைவி மற்றும் அவரது தாய் தந்தை அவரது வளர்த்த மூன்று பிள்ளைகள் என அவர்களது குடும்பம் விரிகின்றது. கடந்த தடவை அவரோடு அவரது குடும்பம் பற்றி உரையாடியபோது தலைமுறை தலைமுறையாக தாம் விவசாயக்குடும்பம் எனவும் தற்போது தனது பிள்ளைகளில் ஒருவர் கணனி பொறியியற்துறையில் கற்கையை முடித்து வேலை செய்வதாகவும் மகள் பெண்களுக்கான மருத்துராவதற்கான மருத்துவக்கல்வியின் இறுதியாண்டிலும் ஒரு மகன் கல்விகாலம் நிறைவடைந்ததும் விவசாயத்தை்பொறுப்பேற்று நடத்த ஆர்வங்கோண்டு ஓய்வுநேரங்களில் தன்னோடு   இணைந்து வயல் மற்றும் பண்ணை வேலைகளையும் கவனிப்பதாக பெருமையோடு கூறினார்.

நகர்ப்புற மனிதர்களின் வாழ்வை வைத்து இதுதான் சுவிஸ்நாட்டவர்களின் வாழ்வியல் என அறிதியிட்டுக்கொள்வோர் நிச்சயம் கிராமங்களுக்குச் சென்று அந்த மக்களின் வாழ்வியலைக் காணவேண்டும். அவர்களின் குடும்ப அமைப்பை, இப்படித்தான் வாழல் வேண்டும் என்ற அவர்களின் வாழ்வின் வரைபைக் காணலாம்.

போன ஒவ்வொரு தடவையும் வீட்டுக்கு அழைத்துச் சென்று ஆச்சி ஊத்தும் கோப்பியை காச்சின கசிப்புக் கலந்து அன்போடு பருகத் தந்து விருந்தோம்பி அனுப்பி வைப்பார்கள். கச்சல் கோப்பியும் காச்சின கசிப்பும் சுவிசின் கிராமங்களின் அதி உன்னத பானமாகும். சீமை நாவல் (செரி), பேரிக்காய் அல்லது குமுளிக்காய் (அப்பிள்) ஆகியவற்றிலிருந்து காய்ச்சி எடுக்கப்படும் மதுவானது மதுசாரம் மிகவும் அதிகமானது. அதில் சுமார் 80 %வரையான மதுசாரம் இருக்கும். மருந்துபோல் பயன்படுத்துவார்கள். ஒரு கோப்பை சூடான கறுப்புக் கோப்பியில் ஒரு தேக்கரண்டி அல்லது ஒரு மூடி மதுவை கலந்து அதே சூட்டோடு குடித்தால் நெஞ்சுச்சளி, தடிமன் போன்றவற்றுக்கு சிறந்த நிவாரணம் கிடைக்கும். குளிர்காலத்தில் இதனை பருகினால் குளிரைத்தாங்கும் கதகதப்பை உடல்பெற்றுக்கொள்ளும். உணவுச் செமிபாட்டையும் துரிதப்படுத்தும். கிட்டத்தட்ட எங்கள் ஊரில் குழந்தைகளுக்கு கிறேப் வாட்டர் பருகக் கொடுப்பதைப்போல.

சுவிஸ் மக்களும் வாழ்வும்