Pages

October 2, 2022

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் 




எனக்கு நன்றாக பிடித்துள்ளது.

1 குந்தவை

2 வந்தியதேவன்

3 அருண்மொழி

4 ஆதித்த கரிகாலன்

5 நந்தினி

இந்த வரிசையில் பாத்திரப் படைப்புகள் மனங்களில் நிறைகின்றன.

நாவல் திரைக்கதையாக மாறும் போது அதன் உருமாற்றம் எந்த வகையில் இருக்குமென்று எதிர்பார்த்தேனோ அதே போல் இருந்தது.

முதற் பாகத்திலேயே அருண்மொழிவர்மனை அறிமுகப்படுத்தி விட வேண்டும் என்ற நோக்கம் நாவலில் உள்ள கதை நகர்வை விரைவுபடுத்தியுள்ளது. கதையில் இரசித்த பல சம்பவங்கள் இல்லாமல் இருந்தாலும் ஏமாற்றத்தை தரவில்லை.

பொன்னி நதி பாடலின் காட்சிப்படுத்தல் பாடலை மனதோடு ஒட்டச் செய்கின்றது.

சோழா சோழா பாடல் அதற்கான காட்சிப்படுத்தலால் மனதோடு ஒட்டவில்லை. அந்தப் பாடலில் வரும் புலிக்கொடி கரிகாலன் போன்ற வார்த்தைகள் எம்மை எங்கோ கொண்டு செல்வதாலும் இந்தக் காட்சிப்படுத்தல் எம் மனதோடு ஒட்டாமல் போவதற்கான காரணியாக இருக்கலாம்.

குந்தவை - நந்தினி சந்திக்கும் காட்சி, அருண்மொழி, வந்தியதேவன் சந்திக்கும் காட்சிகளும் ஆதித்த கரிகாலனின் அறிமுகமும் மனதில் நிறைகின்றது.

கடற்சமர் மிரட்டிப் போகின்றது. 

தனிமனித வீரத்தை கொண்டாடும் பாகுபலியோடு ஒரு இனத்தின் புனைவுடன் கூடிய வரலாற்றை ஒப்பிட முடியாது. பாகுபலியை எதிர்பார்த்து போவோருக்கு இங்கு வேறுவிதமான அவலே காத்திருக்கின்றது.

மொத்தத்தில் பார்க்க கூடிய திரைப்படம்.