Pages

March 1, 2024

அக்காப் பிள்ளை அம்மா

 செய்தி கேட்ட கணம் முதலாய்

சேயைத் தேடிய தாய் தான்

சிந்தை எங்கும் வந்து போகின்றாள்

அக்காப் பிள்ளை அம்மா

ஆரோ பெத்த பிள்ளை என்னைக் கண்ட போதே

உச்சி மோந்து எஞ்சில் ததும்ப முத்தம் தந்து

உவகை கொண்டு உருகி நின்றவள்

பெத்த பிள்ளை தன்னை காண வருவானென்று

எத்தனை ஆண்டாய்க் காத்திருந்தவள்

கண்டிருந்தால் எப்படி எல்லாம் அணைத்து மகிழ்ந்திருப்பாள்.

எல்லாம் கானலாகிப் போனதுவே