Pages

November 26, 2016

தமிழ் இன அரணே போற்றி!!!

காப்பு


சீர் மேவும் ஈழ திருநாட்டு மன்னவன்

பார் வாழும் தமிழர் இல்லத்து பகலவன்

கார் இருளகற்றும் கரிகாலன் மீதினிலே

ஈழத்துப்பித்தன் இவன் போற்றி பாடி புகழ்பரப்ப 

விதைத்த புலி மறவர் மீதினிலே காப்பதாமே....


தமிழ் இன அரணே போற்றி!

   தாய்த் தமிழ் தளிரே போற்றி!

வாய்த்த நம் வளமே போற்றி!

   வரலாற்றின் பேர் ஒளியே போற்றி!

வல்வை இன் செல்வா போற்றி!

   வளம் மிகு வளவா போற்றி!

ஈடிலா அரும் பொருளே போற்றி!

   ஈகைக்கு மறுசொல்லே போற்றிபோற்றி!


தமிழ்க் குடி காத்தோய் போற்றி!

  தன் குடி ஈந்தோய் போற்றி!

கடல்தனை ஆண்டோய் போற்றி!

  காற்றிலும் பறந்தோய் போற்றி!

மாதர் தம் மடமையை உடைத்தோய் போற்றி!

    மாசில்லா மன்னவா போற்றி!

தேற்றுவார் இல்லா இனத்தின் தேவனே போற்றி!

  தேசியத்தலைவனெனும் பெரோளியே போற்றிபோற்றி!


மாறில்லா கொள்கை கொண்டோய் போற்றி!

  மனிதத்தின் மான்புறு வடிவே போற்றி!

செந்தளிர்கள் காத்தோய் போற்றி!

   செஞ்சோலை தனை அமைத்தோய் போற்றி!

செங்கொடி கண்ட செல்வனே போற்றி!

   அன்பு இல்லம் கண்டோய் போற்றி!

அனாதை என்ற சொல்லை அழித்தோய் போற்றி!

    எத்திக்கும் புகழ் கொண்ட எந்தையே போற்றிபோற்றி!

   

முப்படை கண்ட தமிழா போற்றி!

   மூவுலகிலும் காணாத புண்ணியா போற்றி!

இந்தியப் படைகளை எதிர்த்தோய் போற்றி!

   இரும்பின் திடம் கொண்டோய் போற்றி!

கரும்பினை ஒத்த குணத்தோய்போற்றி!

   கார் இருள் அகற்றிய கதிரே போற்றி!

   நெருங்கும் பகையை நீர்த்தாய் போற்றி!

நேரிய பார்வை கொண்ட மன்னவா போற்றி!போற்றி!


நெருப்பினை ஒத்த விழியோய் போற்றி!

  நிலவினை ஒத்த முகத்தோய் போற்றி!

 நீறு பூத்த நெருப்போய் போற்றி!

காவல் துறை கண்டோய் போற்றி!

   ஏவல் துறைகளை அழித்தோய் போற்றி!

நிழல் அரசு கண்டோய் போற்றி!

  நீதியை நிலை நாட்டினாய் போற்றி!

நின்மதி தந்த நித்திலா போற்றிபோற்றி!


கல்விக் கழகம் கண்டோய் போற்றி!

  கண்ணெனத் தமிழை காத்தோய் போற்றி!

கலைகளை வளர்த்த காவியா போற்றி!

 விலைபேச முடியா வீரியா போற்றி!

அலைதனை ஆண்ட அண்ணனே போற்றி!

 நிலை தவறாத நீதியனே போற்றி!

குலையாத அரசின் கோவே போற்றி!

தலையான எங்கள் தலைவா போற்றிபோற்றி!

 

வேலுப்பிள்ளையின் மைந்தனே போற்றி

  வீரச்சேனையின் அதிபதியே போற்றி

வித்தகனே தத்துவனே வீரனே போற்றி

 விடுதலைப் புலி அமைத்த வீரியமே போற்றி

பார்வதி அம்மா தம் பாலகா போற்றி

 பாரில் தமிழர் தம் பகலவா போற்றி

பாசம் கொண்ட தலைவா போற்றி போற்றி


உலகம் வியக்கும் உன்னதமே போற்றி

 ஊராண்ட தமிழின மாண்பே போற்றி

தீரனேதேசக் காவலனே போற்றி

 தீச்சுவாலையை முறியடித்தோய் போற்றி

தீந்தமிழை அரசாள வைத்தோய் போற்றி

 துயிலும் இல்லங்கள் அமைத்தோய் போற்றி

தொலை நோக்கம் கொண்டோய் போற்றி

  தூய தமிழ் தன் காவலா போற்றி போற்றி 


சூரியத் தேவனே சுந்தரா போற்றி!

  சூழ்ந்த தொல்லைகள் சுட்டெரித்தோய் போற்றி!

கானகம் ஆண்ட காவலனே போற்றி!

  இணுவை மண்ணில் பிறந்தோய் போற்றி!

இன்னல்கள் யாவும் களைந்தோய் போற்றி!

   புங்கை மண்ணில் மணந்தோய் போற்றி!

புத்தொளி எமக்கு பாய்ச்சினோய் போற்றி!

   மலரும் ஈழத்தின் மான்பே போற்றிபோற்றி!


 மீன்மகள் தேசத்தின் சூரியா போற்றி!

   தேன்மலர் காட்டின் தெய்வமே போற்றி!

முல்லை மண்ணை மீட்டோய் போற்றி!

  மூத்த குடிக்காய் இல்லம் அமைத்தோய் போற்றி!

ஓயாமல் சுழன்ற அலையே போற்றி!

   நெருப்பாற்றில் நீந்திக் கடந்தோய் போற்றி

ஒருதாய் மக்களாய் எமை இணைத்தோய் போற்றிபோற்றி!

  

காத்திகை மைந்தனே கதிரோனே போற்றி!

  காலம் தந்த காவியனே கரிகாலனே போற்றி!

நீல வான எல்லை தனை அளந்தோய் போற்றி!

  நித்திலம் முழுதும் புகழ் பெற்றோய் போற்றி!

எம் தமிழ் குலத்தின் கொழுந்தே போற்றி.!

  ஏற்றம் கண்ட மாபெரும் மன்னவா போற்றி!

காற்றென பகை சாடி காத்தோய் போற்றி!

 ஊற்றென எழும் எங்கள் உணர்வே போற்றி போற்றி!


கரிகால வளவனே காவியனே போற்றி!

   வழிகாட்டி வலுச் சேர்க்கும் வல்லவா போற்றி!

புறநானூற்றுப் போர்ப் புலியே போற்றி!

   அகம் யாவும் நிறைந்த ஐயனே போற்றி!

அகிலத் தமிழரை ஆண்டவா போற்றி!

   பெருமையில்லாப் பேரரசே போற்றி!

பிரபாகரன் என்னும் பெருநிதியே போற்றி!

   ஈழத்தின் தலைவா போற்றிபோற்றி!



#ஈழத்துப்பித்தன்

26.11.2015 - 2016


#HBDtamiltiger

#HBD_tamiltiger

#பிரபாகரன்

தமிழ் இன அரணே போற்றி!!!

தமிழ் இன அரணே போற்றி!
   தாய்த் தமிழ் தளிரே போற்றி!
வாய்த்த நம் வளமே போற்றி!
   வரலாற்றின் பேர் ஒளியே போற்றி!
வல்வை இன் செல்வா போற்றி!
   வளம் மிகு வளவா போற்றி!
ஈடிலா அரும் பொருளே போற்றி!
   ஈகைக்கு மறுசொல்லே போற்றி!

தமிழ்க் குடி காத்தோய் போற்றி!
  தன் குடி ஈந்தோய் போற்றி!
கடல்தனை ஆண்டோய் போற்றி!
  காற்றிலும் பறந்தோய் போற்றி!
மாதர் தம் மடமையை உடைத்தோய் போற்றி!
    மாசில்லா மன்னவா போற்றி!
தேற்றுவார் இல்லா இனத்தின் தெய்வமே போற்றி!
  தேசியத்தலைவனெனும் பெரோளியே போற்றி!

மாறில்லா கொள்கை கொண்டோய் போற்றி!
  மனிதத்தின் மான்புறு வடிவே போற்றி!
செந்தளிர்கள் காத்தோய் போற்றி!
   செஞ்சோலை தனை அமைத்தோய் போற்றி!
செங்கொடி கண்ட செல்வனே போற்றி!
   அன்பு இல்லம் கண்டோய் போற்றி!
அனாதை என்ற சொல்லை அழித்தோய் போற்றி!
எத்திக்கும் புகழ் கொண்ட எந்தையே போற்றி!
   
முப்படை கண்ட தமிழா போற்றி!
   மூவுலகிலும் காணாத புண்ணியா போற்றி!
இந்தியப் படைகளை எதிர்த்தோய் போற்றி!
   இரும்பின் திடம் கொண்டோய் போற்றி!
கரும்பினை ஒத்த குணத்தோய்போற்றி!
   கார் இருள் அகற்றிய கதிரே போற்றி!
   நெருங்கும் பகையை நீர்த்தாய் போற்றி!
நெருப்பினை ஒத்த விழியோய் போற்றி!
  
நிலவினை ஒத்த முகத்தோய் போற்றி!
  நீறு பூத்த நெருப்போய் போற்றி!
காவல் துறை கண்டோய் போற்றி!
   ஏவல் துறைகளை அழித்தோய் போற்றி!
நிழல் அரசு கண்டோய் போற்றி!
  நீதியை நிலை நாட்டினாய் போற்றி!
கல்விக் கழகம் கண்டோய் போற்றி!
  கண்ணெனத் தமிழை காத்தோய் போற்றி!

சூரியத் தேவனே சுந்தரா போற்றி!
  சூழ்ந்த தொல்லைகள் சுட்டெரித்தோய் போற்றி!
கானகம் ஆண்ட காவலனே போற்றி!
  இணுவை மண்ணில் பிறந்தோய் போற்றி!
இன்னல்கள் யாவும் களைந்தோய் போற்றி!
   புங்கை மண்ணில் மணந்தோய் போற்றி!
புத்தொளி எமக்கு பாய்ச்சினோய் போற்றி!
   மலரும் ஈழத்தின் மான்பே போற்றி!

 மீன்மகள் தேச சூரியா போற்றி!
   தேன்மலர் காட்டின் தெய்வமே போற்றி!
முல்லை மண்ணை மீட்டோய் போற்றி!
  மூத்த குடிக்காய் இல்லம் அமைத்தோய் போற்றி!
ஓயாமல் சுழன்ற அலையே போற்றி!
   நெருப்பாற்றில் நீந்திக் கடந்தோய் போற்றி
ஒருதாய் மக்களாய் எமை இணைத்தோய் போற்றி!
   காத்திகை மைந்தனே கதிரோனே போற்றி!

கரிகால வளவனே காவியனே போற்றி!
   வழிகாட்டி வலுச் சேர்க்கும் வல்லவா போற்றி!
புறநானூற்றுப் போர்ப் புலியே போற்றி!
   அகம் யாவும் நிறைந்த ஐயனே போற்றி!
அகிலத் தமிழரை ஆண்டவா போற்றி!
   பெருமையில்லாப் பேரரசே போற்றி!
பிரபாகரன் என்னும் பெருநிதியே போற்றி!
   ஈழத்தின் தலைவா போற்றி! போற்றி!

#ஈழத்துப்பித்தன்
26.11.2015 - 2016

#HBDtamiltiger
#HBD_tamiltiger
#பிரபாகரன்
முதன் முதலா காதோரம் கிசு கிசுத்தவள்....
*********************************************

அந்த அதுதான் அந்த இணையத்திலை இப்பிடி தலைப்புக்குடுத்ததும் ஓடிப்போய் பாக்கிற மாதிரி இதையும் பாப்பியள் எண்ட ஒரு நப்பாசையில்....

முன்னொரு காலத்திலை எப்பிடி ரலி சைக்கிள், சொனி ரீவி, மான் மார்க் குடை, குடை மார்க் ஓடு, பனசொனிக் ரேடியோ, பைனியர் செற் எல்லாம் பிரபலமானதா இருந்ததோ அப்பிடித்தான் நொக்கியா போனும் இருந்தது.

1997 ஆம் ஆண்டு ஓரளவுக்கு கைப்பேசியள் புளக்கத்துக்கு வந்திட்டாலும் அது சாதாரண மக்களின்ரை பாவனைக்கு வரேல்லை. நொக்கியா, மொத்ரெல்லா எண்ட இரண்டு நிறுவங்கள்தான் முதலிலை கைபேசிகளை அறிமுகப்படுத்தியிருந்தன. கிட்டத்தட்ட ஒரு மூடி வைச்ச வெத்திலை பெட்டி அளவிலை அந்த கைபேசிகள் இருக்கும். கதைக்கேக்கை ஏரியலை இழுத்து விட்டுத்தான் கதைக்க வேணும்..

முதலிலை வந்த கைபேசிகளுக்கு இப்ப மாதிரி சிம் போடுற நடைமுறையில்லை. தொலைபேசியை வேண்டி சுவிஸ்கொம்மிலை கொண்டே குடுத்தா அவை  அதுக்கு இணைப்பை குடுத்து தருவினம் அந்த இணைப்புக்கு நாத்தல் சீ எண்டு பேர். அதிலை கதைக்கலாம் குறுந்தகவல் அனுப்பிற வசதியோ மணிக்கூடு நாட்காட்டி வசதியளோ இல்லை. ஏன் ஆர் தொடர்புகொள்ளினம் எண்டதுகூட தெரியாது.

பிறகு நாத்தல் டீ எண்ட புது இணைப்பு அறிமுகமாச்சுது அதுக்கு இப்ப உள்ள சிம்காட் போடுற மாதிரியான நடைமுறை அந்த காட் இப்ப உள்ள கடன் அட்டையின்ரை அளவு. அதிலைதான் முதன் முதலா அழைப்பவரின் இலக்கம் திரையில் விழும் நடைமுறை வந்தது. அழைப்பவரின் தொடர்பை எடுத்து அவர் தன்னை அறிமுகப்படுத்த முன்னமே சொல்லுங்கோ அத்தான் எண்டோ சொல்லுங்கோ குமார் அண்ணை எண்டோ சொல்லி இன்ப அதிர்ச்சி குடுக்கிற ஒரு தனிச்சுகம்.  நான் அறிய பாசல் மாநிலத்திலை அஞ்சு தமிழாக்களிட்டைதான் கைபேசி இணைப்பே இருந்தது. கைபேசி வைச்சிருந்தவைங்கு அது ஒருவித கெத்தாவும் இல்லாதவைக்கு வைச்சிருக்கிறவை ஒரு தேசத் துரோகி மாதிரியும் தெரிவினம். நானறிய பாசலிலை வைச்சிருந்தவையில ஒருத்தருக்கு எங்கையன் கொண்டாட்டங்களிலை நிண்டா அடிக்கடி கைபேசி அழைப்பு வரும். எழும்பி ஓடிப்போய் ஆக்கள் கூடுதலா உள்ள இடமாப் பாத்து ஆள் நிண்டு பிலத்து கதைக்கும். பிறகுதான் ஒருநாள் என்னெண்டு விசாரிச்சா இவரே நண்பர் ஒருத்தரிட்டை காசை குடுதுவிட்டு தன்னை தொடர்புகொள்ளச் சொல்லுறது தெரிய வந்துது.

இப்பிடியான 1997ம் ஆண்டு சுவிசின் மிகச் சிறந்த நிறுவனமான நோவார்த்திஸ் நிறுவனத்திலை நானும் தொழிற்கல்வி படிச்சுக்கொண்டிருந்தன். அப்ப அங்கை வேலை செய்யிற எங்கள் பிரிவிலுள்ள எல்லாருக்கும் கீழை படத்திலை காணப்படுற கைபேசி தரப்பட்டுது. அதாவது எமது பிரிவுக்கு நிறுவனத்தின் அனைத்துப்பகுதிகளிலையும் நாங்கள் வேலை செய்யிறதாலை எங்கையன் நாங்கள் குந்தியிருந்து கதைச்சுக்கொண்டிருந்தா தேடிப்பிடிக்கதான் இந்தக் கரிசனை.

உந்தக் கைப்பேசி கிட்டத்தட்ட முக்காக்கிலோ தேறும். ஆனாலும் அழைப்பு வரேக்கை அந்த ஏரியலை இழுத்து விட்டுட்டு கதைக்கிறதிலை ஒரு கெத்துதான். அதிலை இருந்து ரலி சைக்கிள் காரர் மாதிரி நானும் நொக்கியாவின் தீவிர விசிறியாப் போனன்.

பிறகு பனசொனிக் முதன் முதலா சத்தத்தை நிப்பாட்டி வைக்க உதறக்கூடிய கைப்பேசிய அறிமுகப்படுத்தேக்கை அங்காலை மனம் நாடினாலும் நொக்கியா என்ற அந்த தனிக்கௌரவம் மாறவிடேல்லை. பிறகு நொக்கியா கமராவோட அறிமுகப்படுத்தின 7100 முதல் இணையம் பாவிக்க கூடியதாய் அறிமுகப்படுத்தின  N95 வரைக்கும் அதனோட உறவு தொடர்ந்தது.

முதன் முதலா கமராக்கு பிளாசோட அறிமுகப்படுத்தினது மொட்ரோலா 2004 இல் அந்த கைபேசி அறிமுகமாக அதுக்கு மாறிப்பாத்தன் நம்மை கொஞ்சம் நிறமாக்காட்டுமெண்டு ஆனாலும் அதன் உள்ளமைப்பு பிடிக்காததால ஒரு வாரத்திலை திரும்பவும் மாறியாச்சு.

அதன் பின்னரான தொழில் நுட்பத்தில் நொக்கியா பின் நிற்க அப்பிளின் கவர்சிகர விளம்பரம் உள்புகுந்து கொண்டது. ஐபோன் 5 வரையில் அப்பிளுடனான உறவு நீடித்த பொழுதிலும் இரு தொலைபேசி பாவனையால் கலக்சியும் s2 இல் இருந்து உள் நுழைந்து இன்று s7 வரை தொடர்கிறது. அப்பிளின் செயற்பாடு நேர்த்தியானதாக இருந்த போதிலும் எனக்கு பிடித்த பொழுதுபோக்கான படம் பிடித்தலை கலக்சி சிறப்பாக செய்து தருவதால் தொடர்கிறது உறவு...


July 25, 2016

மண்ணகத்தில் உள்ள மட்டும் மறந்திடுமோ....



பச்சை பசுமை தனைக் காணுகையில் - என்
தாய்நாட்டு நினைவு வந்து
தாலாட்டிச் செல்லுதம்மா
மாமர நிழலினிலே ஊஞ்சல் கட்டியாடி
மனம் மகிழ்ந்த நாட்களெல்லாம்
மனத்திரையில் வந்து
மதி மயக்கி நிற்குதம்மா
வேப்ப மர நிழலிலே
பாய் விரித்துப் படுத்த நாட்கள்
பசு மரத்து ஆணி போல
பதிந்த நெஞ்சு விம்மி விம்மி அழுகுதம்மா
பள்ளிப் பருவமதில்
பகிடியாய் கடந்த நாட்கள்
பாலர் வகுப்பினிலே
பாட்டி வடை சுட்ட கதை
படித்து பகுத்தறிய மறந்த நாட்கள்
பக்கம் வந்து சீண்டுதம்மா
புளியடிப் பள்ளியிலே
புழுகத்தோடு பயின்ற நாட்கள்
புட்டும் முட்டைப்பொரியலும்
பிரட்டிக் குழைத்து தின்ற நாட்கள்
புரையேறி நெஞ்சமெங்கும்
புத்துணர்வாய் கிடக்குதம்மா
அம்மன் கோவிலிலே
அழகான விழாநாளில்
ஊர் கூடி இழுத்த தேர் இன்று
ஊர் காவல் படை இழுக்க
உள்ளமெல்லாம் உருக்குலைந்து
உணர்வற்று தவிக்குதம்மா
புலம் பெயர்ந்தோர் வாழ்வு
புகழ் மிக்க வாழ்வு என்று
புகழ்ந்து பேசுவோர் பலரும்
புண்பட்டும் கிடக்கும் எம்
உணர்வுகளை அறிவாரோ?

#ஈழத்துப்பித்தன்
2003 - 2016

படம்: சுவிற்சர்லாந்தின் எல்லையில் அமைந்துள்ள பிரெஞ்சு தேசத்துக் கிராமமொன்றில் அதிகாலைப்புலர்வு.

June 10, 2016

வாழும் போதே கௌரவிப்போம் 2


Rajeevan Ramalingam ரஜீவன் அண்ணா றெயின் இஞ்சினிலை முதல்ப்பெட்டியா Kogulan Kandasamy கோகுலனை கொழுவிவிட கோகுலன் Robert Thiru றொபேட் அண்ணாவை கொழுவ றொபேட் அண்ணா என்னை கொழுவிவிட்டிருக்கிறார். இது யாரும் கழன்று போய்விட முடியாமல் தொடர வேண்டிய ஒரு பிணைப்பு. இதில் நான் மதிக்கும் ஒரு பல்துறைக் கலைஞனாக இருக்கும் றொபேட் அண்ணா என்னையும் ஒருவனாய் மதித்து அழைத்திருப்பது மகிழ்ச்சியே. இதில் வியப்பு என்னவென்றால் முதல் நாள் இரவு றொபேட் அண்ணா என்னை இதில் இணைத்துவிடுவதுபோல் கனவு காண்கிறேன் விடிந்து பார்த்தால் அப்படியே நடந்திருக்கின்றது.

முதலில் இத்தகைய முயற்சியை ஆரம்பித்த ரஜீவன் அண்ணாக்கு மனம் நிறைந்த நன்றியும் வாழ்த்துக்களும். வாழும் போதே எமது கலைஞர்கள் மதிப்பளிக்கப்பட வேண்டும் என்ற நூலகவியலாளர் என்.செல்வராஜா அவர்களின் கோட்பாட்டை முடிந்த வரை பின்பற்றி வருபன் என்ற வகையில் இத் திட்டம் மன நிறைவைத் தருகின்றது. றொபேட் அண்ணா யாரையாவது பற்றி எழுதுமாறு முழுச் சுதந்திரத்தை எனக்கு வழங்கியுள்ளார். அவரது வேண்டுகோளின்படி பிரான்சிலுள்ள எனக்கு மிகவும் பிடித்த கலைஞர் ஒருவர் பற்றி தொடர்கிறேன். இணைந்திருங்கள்.

ஆம், நான் குறிப்பிடப் போகும் நபர் வேறு யாருமல்ல சாட்சாத் றொபேட் அண்ணாவேதான். இரண்டாயிரங்களின் முற்பகுதியில் புத்தொளி வீசி ரீரீஎன் தொலைக்காட்சி தோற்றம்பெறுகின்றது. பலதரப்பட்ட நிகழ்வுகளோடு உதயமான தொலைக்காட்சியில் புதிதாய் மலங்க மலங்க முழியை உருட்டியபடி ஒருவர் அறிமுகமாகிறார், குறிப்பாக செய்தி மற்றும் மனங்கவர் நிகழ்வான தாயகவலம் வேறும் பல நிகழ்வுகளில் றொபேட் அண்ணா அடிக்கடி தோன்றுவார். இதில் தாயகவலம் நிகழ்வுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பிருந்தது. அதாவது காசியானந்தன் சொன்ன "நீ பனை மரத்தை என் தேசத்தில் காண்கிறாய் நான் பனைமரத்தில் என் தேசத்தைக் காண்கிறேன்" என்ற கூற்றுப்போல் இந் நிகழ்வும் அமைந்தது. அதாவது தாயகத்துக்கும் புலம்பெயர் தமிழருக்குமான தொடர்புகள் மிக இறுக்கமான காலத்தில் தாயகத்தின் காட்சிகளைத் தரிசிக்கும் பெரும் வரமாக அந் நிகழ்வு இருந்தது. அந் நிகழ்வின் தொகுப்பாளராய் இவர் இருந்ததால் மக்களால் "தாயகத்தம்பி" என அன்பாக அழைக்கப்படும் ஒருவரானார். இதை நானே பல இடங்களில் நேரில் கண்டுள்ளேன்.

சமகாலத்தில் ஐபிசி தமிழ் வானொலியும் ரீரிஎன் தமிழ் ஒளியும் சகோதர நிறுவனங்களாக இணைந்த சேவையில் இருந்தன. இவ் இரண்டு ஊடகங்களையும் இணைத்து சுவிசில் இயங்கிய கலையகத்தில் இரு ஊடகங்களிலும் நானும் பணி புரிந்திருந்ததால் றொபேட் அண்ணாவை பல தடவைகள் சந்திக்க முடிந்தாலும் நெருங்கிப் பழக்க கிடைத்த வாய்ப்புகள் மிக குறைவே.

2005 இல் மகிந்த அரசுடனான முதலாங்கட்டப் பேச்சுவார்த்தைகள் ஜெனிவாவில் நடைபெற்ற காலப்பகுதியில் றொபேட் அண்ணா ரீரிஎன்னுக்காகவும் நான் ஐபிசி தமிழுக்காகவும் செய்தி சேகரிக்கச் சென்றிருந்தோம். அந்தக் காலப்பகுதியில்தான் றொபேட் அண்ணாவுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிட்டியது. தான் இருக்கும் சூழலை எந் நேரமும் மகிழ்ச்சிகரமாக வைத்திருப்பதில் வல்லவர். அந்த மூன்று நாட்கள் அதிக பொழுதை அவருடன் கழிக்க முடிந்தபோதுதான் ரீவியில் முழி உருட்டும் றொபேட் என்ற நிகழ்ச்சித் தொகுப்பாளனுக்கும் றொபேட் என்ற கலையுணர்வுமிக்க கலைஞனுக்கும் இடையே நிறைய விடயங்கள் உள்ளமை புலப்பட்டது.

கால ஓட்டத்தில் ரீரிஎன் என்ற சாம்ராஜ்ஜியம் சரிய நானும் தற்போது பணியாற்றும் வானொலியின் பொறுப்புக்களுள் நுழைய றொபேட் அண்ணாவுடனான தொடர்புகள் அற்றுப்போனது. மீண்டும் 2011இல் சுவிசில் நடைபெற்ற "LIFT" நிறுவனத்தின் முதலாவது குறும்பட திரையிடல் நிகழ்வுக்குப் போனபோது றொபேட் அண்ணாவை மீண்டும் கண்டு அழவழாவ முடிந்தது. அன்றைய நாளில்தான் அவரது இயக்குனர் என்ற அவதாரம் பற்றியும் அறிய முடிந்தது. அந்தத் திரையிடல் நிகழ்வில் இவரது இயக்கத்தில் வெளிவந்த "குருவிச்சை" என்ற குறும்படமும் திரையிடப்பட்டது. மிகச் சிறந்த இயக்குனராக மிளிர்ந்தார். அந்த குறும்படம் பற்றிய கருத்தை முதலில் பதிவாக்கிய பெருமை என்னைச் சாரும்.

அக் குறும்படம் பற்றி அன்று பின்வருமாறு பதிவு செய்தேன்.

"அடுத்து குருவிச்சை இது அகரம் தயாரிப்பில் றொபேட்டின் இயக்கத்தில் வெளியான குறும்படம் இன்று எம்மவர் மத்தியில் மட்டுமல்ல உலகின் அனைத்து தரப்பினராலும் உபயோகப்படுத்தும் முகப்புத்தகம் பற்றிய ஒரு குறும்படம் அழகான ஒளிப்பதிவுடன் கதை அழகாக நகர்த்தப்பட்டிருந்தது. திரைக்கதையிலும் நகர்விலும் ஒளிப்பதிவிலும் அதி அக்றை காட்டிய இயக்குனர் ஒலிப்பதிவை கவனிக்கத் தவறிவிட்டார். அதை அவரும் ஒப்புக் கொண்டிருந்தார். குறுகிய காலத்தில் எடுத்து முடிக்கப்பட்டதால் அந்தக் குறையை பெரிது படுத்தாமல் பார்த்தால் அற்புதமான படைப்பு."

அந்த விழா பற்றிய பதிவின் பின்னர் றொபேட் அண்ணாவுடனான முகப்புத்தக நட்புக் கிடைத்தது. அவரைப் பற்றியும் அவரது தனித் திறன்கள் பற்றியும் பல விடயங்களை அறிய முடிந்தது. ஓவியர், பத்திரிகையாளர், எழுத்தாளர், ஒளிப்பதிவாளர், இசைக்கலைஞர் என பல்துறை சார்ந்த திறன்களையும் கொண்டவராகவும்  அன்பான தந்தை, துணைவன், குடும்பத் தலைவன் என்ற அவதாரங்களைக் கொண்டவராகவும் காணமுடிந்தது.

ஈழநாதம், ஈழநாடு பத்திரிகைகளில் ஆசிரியர் பீடத்தில் பணிபுரிந்ததோடு பல புனைபெயர்களில் பல ஆக்கங்களையும் எழுதித்தள்ளியிருக்கிறார். மனோரஞ்சிதன் என்ற புனைபெயரில் இவர் எழுதிய 'நாதவலை' என்ற சிறுகதையொன்றை அண்மையில் வாசிக்கமுடிந்தது. இத்தகைய பல்துறை ஆளுமை மிகு கலைஞனிடம் நான் அறிந்த வரை குறையை தேடித் தேடிப் பார்க்கிறேன் எதுவும் கிடைக்கவில்லை. இத்தனை ஆளுமை கொண்ட ஒருவர் எவ்வித ஆர்ப்பாட்டமுமில்லாமல் இருப்பதே அவரது + & - . அவரது அடையாளமான குழந்தைத்தனமான கல கல என்ற சிரிப்பு களங்கமில்லாமல் தொடரவேண்டும் எனக் கேட்டு நிறைவுக்குள் வருகிறேன்.

நான் அவர் பற்றி சொல்லாமல் விட்டவை பல அதையெல்லாம் கருத்தெழுதும் உறவுகள் நிவர்த்தி செய்வார்கள். பிரான்சிலிருந்து பிரித்தானியா போய் மீண்டும் பிரான்ஸ் வந்து சுவிசில் நிற்கும் இந்த தொடர்வண்டியை அடுத்த பெட்டி கொழுவ பல்லாயிரம் மைல்கள் தாண்டி எங்கள் தாயகம் நோக்கித் திருப்புகிறேன். நான் பெரிதும் மதிக்கும் இன்னொரு பல்துறைக் கலைஞன். எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டு செயற்படும் ஒரு கலைஞனான MaThi Sutha மதிசுதாவை அழைக்கிறேன். என்னைப்பற்றி எழுதித் தொடர...

May 31, 2016

அறிவுத் தேடல் அழிக்க முடியாததே



ஒற்றைப் புத்தகம் வைச்ச இடம் மறந்தாலே
உள்ளம் பதை பதைக்கும்
எங்கள் ஊரின் மொத்தப் புத்தகமும்
அங்கைதான் குவிச்சுக் கிடந்ததாம்
ஓலைச்சுவடி முதல்
ஊர்களின் வரலாறும் தொன்மையும்
சொல்லும் அத்தனை நூலும்...
குறிப்பா இலங்கைத் தீவே தமிழன்ரை
எண்டதை பொழிப்பாச் சொல்லுற ஆவணமெல்லாம்
தென்னாசியாவிலை பெரிய நூலகம்
இதுவெண்டு  எல்லாரும்
புழுகமாச் சொல்லிச் சொல்லி
செருக்குப் படுறவையாம்
கல்வி அறிவிலை உலக அறிவிலை
தமிழன் கொடி கட்டிப் பறக்க
இதுதான் காரணமெண்டதை
எல்லாரும் அறிஞ்சதாலை
எப்பவும் அதுக்கு தனி மவுசுதானாம்
கல்வி அறிவைச் சிதைச்சால்
கண்டபடி தமிழனாலை வளரேலாது
எண்டு கற்பனை கட்டின சிங்களம்
இரவோடு இரவா வந்து உயிரோடை
கொள்ளி வைச்சுப் போனதாம்
அப்பிடிச் செய்து அரிய பொக்கிசத்தை
அழிச்சு ஒழிச்சாலும் தமிழன்ரை
அறிவுத் தேடலை அழிக்க முடியாமல்
தோத்தது சிங்களம் எண்டது உண்மையே
எரிஞ்ச அந்தச் சாம்பல் மேட்டிலை இருந்து
இண்டைக்கு உலகமெங்கும்
தமிழன் வாழுற நாடுகளிலை எல்லாம்
புத்தக வெளியீடும் நூலகமும்
வீட்டுக்கு வீடு புத்தக்க் களஞ்சியமுமா
உருவங்கொண்டு எழும்பி நிக்குது
ஆயிரந்தான் கிடந்தாலும்
தமிழன்ரை அறிவுத்தேடல் அழிக்க முடியாததே.

#ஈழத்துப்பித்தன்
31.05.2016

May 23, 2016

விதம் விதமா வாழைமரம்


அழகழகா வாழைமரம்
அடுத்தடுத்து குலை சாய்சிருக்கு
விதம் விதமாய் உருவம் கொண்டு
விரும்பும் சுவையில் பழுத்திருக்கு
மாப் பிடிப்பாய் கப்பல்
மனம் பிடித்த இதரை
தேன் இனிக்கும் கதலி - தின்னத்
தெகிட்டாத செவ்வாழை
வெட்டிப் பொரித்துண்ண
விருந்து சிறக்கும் மொந்தனதால்
இத்தனை இனம் இருக்கு எம் தேசத்தில்
அத்தனையும் தொலைத்தோம்
அகதிகளாய் அடுத்தவன் நாடு புகுந்து
அன்னியமண் வாசம் நுகர்வதனால்...

#ஈழத்துப்பித்தன்
22.05.2016

May 20, 2016

பொய்த்துத்தான் போகாயோ..

பொய்த்துத்தான் போகாயோ
*******************************
சத்தம் இன்றி - பெரும்
யுத்தம் இன்றி
சலசலப்பு ஏதுமின்றி
சிணுங்கி வழிகிறாள்
சிலநாளாய் வானமகள்
முன்பெல்லாம்
அவள் வரவு கண்டு
ஆனந்தித்த பொழுதுகள்
அளவுக்குள் அடக்க முடியாதவை
மனம் ஆனந்தப்பூங்காற்று பாடி
மமதையிலே திழைத்திருக்கும்
மண் மணம் நாசி ஊடு புகுந்து
மண்ணில் வாழ்ந்த நாளை
மறுபடியும் மறுபடியும் கிளறி நிற்கும்

ஊர் போய் வந்த பின்னர்
உறவுகள் நிலை கண்ட பின்னர்
பெய்யெனப் பெய்யும் மழை
பிய்ந்த கூரை வழி வழிந்து
நிறைவில்லா வீடுகளை
நிறைத்து நின்றதனை கண்டதனால்
நீ எம்மவர் நிலை மாறுமட்டும்
பொய்த்துத்தான் போகாயோ எனும்
பெரும் ஏக்கம் நெஞ்சமெங்கும்...

#ஈழத்துப்பித்தன்
01.02.2016

May 13, 2016

முள்ளிவாய்க்கால் பேரவலம்


முள்ளிவாய்க்கால் பேராவலம்
முடிவில்லா ஓர் அவலம்
பன் நாட்டுப்படை புகுந்து
பல்லாயிரம் உயிர் தின்று
சொல்லாத கதை கோடி
சுமந்து கிடக்கும் மண்ணது
வில்லாண்ட இனம் ஒன்று
வீறுகொண்டு போர் கண்டு
விடுதலைக்காய் வேள்வியொன்றை
விருப்புடனே நடத்தியதையை
கண் காணச் சகிக்காத
காடையர்கள் கூட்டிணைவில்
இனம் ஒன்று அழிந்ததுவே
ஈரல் குலை அறுந்ததுபோல் தவித்தோமே
பல தேசம் வாழ்ந்தோம்
பார் எங்கும வீதி வழி குவிந்தோம்
பலனேதும் கிடைக்காமல்
பரிதவித்து பைத்தியமானோம்
இனப்படுகொலை ஒன்றை
இரக்கமின்றி சத்தமின்றி அரங்கேறி
இந்தியப் பெருங்கடலும் செந்நிறமாக
இடி வீழ்ந்துபோல் கிடந்தோமே
இமை மூட மறந்தோமே
ஆண்டுகள் ஏழு
அனல் இடை கரைந்து
அரவணைக்க ஆரும் இன்றி
அரற்றிக் கிடக்கிறோம் நாம்

எங்கள் இரத்த உறவுகளே!
ஆறாக உங்கள் இரத்தம்
அலை புரண்டு ஓடி
ந்ந்திக் கடல்
செங்கடல் ஆனபோதும்
அகிலம் முழுதும்
பரந்து கிடந்த எம்மால்
எதுவுமே செய்ய
முடியவில்லையே
என்ற குற்ற உணர்வும்
இயலாமையும்
கண்களைக்குளமாக்க
உங்களை இழந்த நினைவுகளோடு....
எங்கள் உரிமையை வென்று
உலக அரங்கில்
எமக்கான நீதியைப்பெற
அணிதிரள்வோம்
அலை அலையாய்....
ஓரணியில்..

#ஈழத்துப்பித்தன்
02.05.2016

May 11, 2016

சாவுக்கு அழுவதற்கேனும் சமத்துவம் காணுவோம்


மீண்டும் மீண்டும் உருவேற்றி
மீளவும் நினைவில் பெருந்தீ மூட்டி
சொல்லவும் மெல்லவும் முடியாமல் 
உள்ளத்தில் அனல்கின்ற சிறுபொறியை
அணையாமல் காப்பது நம் கடனே
அடையாளம் அத்தனையும் தொலைத்து
அடுத்தவனின் கருச் சுமந்து கிடக்கிறாள்
எங்கள் அன்னைத் தமிழீழ பூமி
உள்ளத்தில் சுழன்றாடும் சிறு நெருப்பை
உருவேற்றி கடத்துவோம் நாளை உலகுக்கு
இனம் ஒன்று அழிந்ததன் அடையாளம்
இல்லாமல் செய்தனர் அதைக் கூட
தினம் அங்கு தடம் அழித்து அழித்து
திருவிழா பூமியாய் மிளிருது இன்று
பட்ட துயர் பகிருவோம் நாளை தலைமுறைக்கு
கொத்துக் கொத்தாய் குதறி எடுத்த
கொத்துக் குண்டின் தடம் கூட இல்லாமல் போனது
செத்துக் கிடந்தவர் பிணம் கூட
சிதை மூட்ட ஆளின்றி சீன அமிலம் தின்று தீர்த்தது
முத்தான எம் முகவரி முடிந்து போனதை பதிந்து வைப்போம்
மலை மலையாய் குவிந்த எம்மவர் மண்டை ஓடுகள் மேல்
மலையாய் எழுந்து நிற்குது ஆக்கிரமிப்பின் சின்னம் அங்கு
மாண்டவர் வரலாற்றை எம்மினமே மறுதலித்துக் கிடக்குது இன்று
ஆண்ட தமிழினத்தின் அரச முடி நிலம் சரிந்து
மீள முடியா அடிமையான கதை சொல்லி உனை உருவேற்று
இன அழிப்பின் ஆதாரமாய் எஞ்சிக் கிடப்பது மே 18 மட்டுமே
உன்னுள் தீ மூட்டி உனை உருவேற்றி உலகுக்கு அதை காட்டு
பேதங்கள் ஆயிரம் எம்மை பிரித்துக் கிடந்தாலும்
சாவுக்கு அழுவதற்கேனும் சமத்துவம் காணுவோம்
இன அழிப்பின் அடையாளம் மே 18 அதை இறுகப் பற்றுவோம்.
(படங்கள் பறந்த வாகனத்துள் இருந்து மனம் கனத்துச் சுட்டவை.)

May 6, 2016

செவ்வண்ணமேனியாள்.


நெஞ்சம் எங்கும்
நினைவாலே நிலைத்தவள்
நித்தம் என் நினைப்பினில்
நீர்க்கமற நிறைந்தவள்
உடல் முழுதும் தழுவி
உவகை தருபவள்
உதடுகளின் இடை புகுந்து
உல்லாசமாய் நுழைந்தவள்
நாசி வழி புகுந்து
நாபிக் கமலத்தை நிறைப்பவள்
துள்ளி ஓடும் குருதியிலும்
தீர்க்கமாய் நிறைந்தவள்
அள்ளி ஆசையோடு முத்தமிடும்
அழகுச் செவ்வண்ண மேனியாள்
நிகரில்லா அவள் வனப்பின்
நினைவுகளைச் சுமக்கிறேன்
நித்தமும் அவள் மடி துயிலவே
தகிக்கிறேன் தவிக்கிறேன்
நாடிச் சென்று அவள் மேனி தழுவ
நாதியற்று நிற்கிறேன்...

#ஈழத்துப்பித்தன்
06.05.2016

April 27, 2016

ஆருக்குச் சொல்லி அழ.....





90களின் முற்பகுதியில் எழுத்து தமிழ் ஊடகங்களின் வளர்ச்சி ஐரோப்பாவில் கோலோச்சிய காலம். செய்திகளை அறிந்து கொள்வதற்கான ஒரே வழியாக எழுத்து ஊடகங்களும் அந்தந்த நாடுகளில் இயங்கிய புலிகளின் கிளைகளினால் இயக்கப்பட்டு வந்த தொலைபேசி வாயிலான செய்திச் சேவையுமே இருந்து வந்தன.

அத்தகைய காலத்தில் பல வார, மாத சஞ்சிகைகளும் பத்திரிகைகளும் வெளிவந்த போதிலும் பரிசிலிருந்து வெளிவந்த 'ஈழநாடு' 'ஈழமுரசு' ஆகிய பத்திரிகைகள் அதிகளவு வாசகர்களைக் கொண்ட செய்தித்தாள்களாக இருந்து வந்தன.

ஒவ்வொரு பதன் கிழமையும் இவ்விரு செய்தித்தாள்களும் அனைத்துக் கடைகளிலும் கிடைக்கும். பெரும்பாலும் மாலைக்குள் செய்தித்தாள் விற்றுத் தீர்ந்து விடும். நேரம் தவறிப்போனால் செய்தித்தாள் கிடைக்காது ஏமாற்றத்தோடு திரும்ப வேண்டியதுதான். 

அப்படி வெளிவரும் இவ் இரு சஞ்சிகைகளிலும் வெளிவரும் பலதரப்பட்ட சிறப்பு ஆக்கங்களாலும் கவரப்பட்டு நானும் நிரந்தர வாசகனாக இருந்தேன். குறிப்பாக ஈழநாட்டில் வரும் ஊர்க்குருவியும் ஈழமுரசில் வரும் ஆருக்குச் சொல்லி அழவும் அதிகம்பேரை கவர்ந்த ஆக்கங்களாகும். இதில் ஊர்க்குருவியை எழுதியவர் இன்று எனது நெருங்கிய நட்பு வட்டத்தில் இருக்கும் Kailase Kanagaratnam என்பதை அண்மையில்தான் அறிந்தேன். அதே போல் ஆருக்கு சொல்லி அழ பகுதியை ஈழமுரசின் ஆசிரியர் மறைந்த கஜன் அவர்கள் எழுதுவார். ஐரோப்பாவின் அவலங்களை ஈழத்து மொழி வழக்கிலே ஆசைத்தம்பி எனும் பெயரில் எழுதி வந்தார். இதை முதலே வாசித்துவிட வேண்டுமென்பதற்காக செவ்வாய் இரவு பாசல் வரும் தொடருந்தில் வரும் ஈழமுரசை பெற்றுக்கொள்ள பாசல் தொடருந்து நிலையத்துக்கே சென்று விடுவேன். இந்த ஆசைதம்பி பாத்திரமே பின்னை நாளின் எனது விடுப்புச் சுப்பர் பாத்திரத்திரப் படைப்புக்கும் உந்துகோலாய் அமைந்தது.

கஜனின் மறைவுக்குப் பின் ஆசைத்தம்பியால் எழுதப்பட்ட ஆருக்கு சொல்லி அழ நூல் உருப்பெற்று வந்திருந்தது. அதன் மீள்வாசிப்போடு இன்றைய பொழுது.

April 19, 2016

ஒருநாள் யுத்த நிறுத்தமாம்...

அருவி ஊற்றென
அழுது வடித்தவள்
அடங்கிக் கிடக்கிறாள்
பொருமி வெடித்திட
புழுங்கித் தவிக்கிறாள்
தழுவித் தகித்தவள்
தயங்கி நிற்கிறாள்

ஒற்றைநாள்
ஒருதலைப்பட்ச
யுத்த நிறுத்தமாம்
சத்தம்  இன்றி
சலனம் இன்றி
இப்போதான்
சற்று சிரித்துச்
சிவக்கிறாள்

சிவக்கிறாள்
சிரிக்கிறாள் இவளென
சிந்தை தெளிந்து
சிரிக்க முடியவில்லை
ஒருதலைப்பட்ச
ஒருநாள்
யுத்த நிறுத்தம் தானாம்

யுத்தம் எப்பவும்
சத்தத்தோடு வெடிக்கலாம்
பாதிப்பு முன்னதை விட
பலமாயும் இருக்கலாம்
யுத்த நிறுத்தம்
காலவரையற்று
நீடிக்கவும் படலாம்
எதற்கும் தயாராய்த்தான்
இருப்பை நிலை நிறுத்த
எடுத்தடி வைக்கிறேன்...

#ஈழத்துப்பித்தன்
19.04.2016

April 11, 2016

சத்திய சோதனை



மிகச் சிறு வயது முதல் நான் வாசிக்க விரும்பிய நூல் சத்திய சோதனை.

சிறு வயது முதல் எங்கள் ஊரின் அண்ணா கோப்பி அல்லது  மில்க்வைற்றினதோ கலண்டரில் சரியாக நினைவில்லை, அதில்தான் முதன் முதலாக காந்தியின் படத்தைப் பார்த்து மனதுக்குள் பதிந்தார் காந்தி. அதே காந்தி பள்ளிக் காலத்தில் வில்லனானார் கட்டுரைப் போட்டிகளுக்காய் அவர் பற்றிய விபரங்களை மனனம் செய்ய வேண்டி வந்த போது.

அதுக்கு பின் தியாகி. திலீபன் உண்ணா நோன்பிருந்த போது "காந்தியத்தின் சிகாமே உனது இரத்த வேள்விக்கு நன்றி"  அப்படியென எழுதப்பட்ட பிரசுரங்களினூடாகவும் காந்தி கூட ஆட்டுப்பால் அருந்தித்தான் உண்ணாவிரதம் இருந்தார் திலீபா நீ நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருக்கிறாயே என்ற கோசங்களூடாகவும் காந்தி மீண்டும் அறிமுகமானார்.

இந்தியா எம் தேசம் மீது தொடுத்த போரின் வலியையும் வடுக்களையும் நினைவு தெரிய ஆரம்பித்த அந்த வயதிலேயே கண்ணால் காண நேர்ந்ததாலும் ராஜீவின் பேருக்குப் பின்னால் காந்தியிருந்ததால் இவையெல்லாம் கூட்டுக் களவாணியள் என்ற கருத்தியல் மனதில் ஆழமாய் வேரூன்றிப் போய்விட்டது.

அதன் பின் இந்திய விடுதலைப் போர் சுபாஸ் சந்திரபோஸ் பற்றி அறிந்தபோது விடுதலைக்காய் நாமும் போராடும் இனமானதால் சுபாஸ் சந்திரபோஸ் மீது இனம்புரியாத பிடிப்பு ஏற்பட்டுப்போனது.

இருந்தபோதும் காந்தியின் சத்திய சோதனையை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் எந்த மாற்றமும் இருக்கவில்லை அதற்கு எனது சுவிற்சர்லாந்திலான கல்விக்காலத்தில் பிரபலங்களின் சுயசரிதைகள் எனும் பாடமூடாக உலகில் உண்மையை மறைக்காமல் தனது சுயசரிதையை எழுதியவர் காந்தி என்ற கூடுதல் தகவல் கிடைத்ததாலும் அடுத்தவரின் அந்தரங்கத்தை அறிவதில் ஆர்வம்கொண்ட தமிழருக்கே உரிய தனித்துவமும் காரணமாகிப் போனது.

பல தடவைகள் எனது புத்தகக் கொள்வனவுகளின் போதும் சத்திய சோதனை நூலை பெற்றுக் கொள்ள முயற்சித்தபோது அது எனக்கு பெரும் சோதனையாகவே முடிந்தது. அனைத்துப் புத்தகசாலைகளிலும் விற்றுத்தீர்ந்துவிட்டது என்ற ஒரே பதிலே கிடைத்தது.

சரி கிடைக்கும் போது வாசிப்போம் என விட்டாச்சு. கடந்த தமிழகப் பயணத்தின் போது சிதம்பரத்தில் நடைபெற்ற புத்தக்க்கண்காட்சியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நூல்கள் கிடந்த போதும் சத்திய சோதனை சோதனையாகவே இருந்தது. அங்கிருந்து புறப்படுவதற்கு முதல் நாள் இறுதிக்கட்டக் கொள்வனவுக்காக தி.நகர் போயிருந்தேன். அங்கேயுள்ள ஒரு இசைப்பேழை விற்பனை நிலையத்தில் ஒலித்துக்கொண்டிருந்த மகாநதி சோபனாவின் குரல் உள்ளே இழுத்தது.

 சில இசைப்பேழைகளை கொள்வனவு செய்துகொண்டு நிமிர்ந்தபோது மகாத்மா காந்தி பொக்கை வாய் திறந்து சிரித்துக் கொண்டிருந்தார். எட்டித் தூக்கிய போது மகிழ்வும் ஒரு வித ஏமாற்றமும் மிஞ்சியது. நீண்ட பல காலமாக தேடிய நூல் எதேட்சையாக கிடைத்த போதும் அதுவும் முதல் மாதம் சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் வடுச் சுமந்து நின்றது. ஆம் நூல் சற்று தண்ணீரில் நனைந்திருந்தது ஆனாலும் உருக்குலையவில்லை. வேறு பிரதி உள்ளதா எனக் கேட்ட போது இப் பதிப்பு விற்றுத்தீர்ந்துவிட்டதாகவும் இதுவே இறுதி நூல் எனும் பதிலை கிடைத்தது. விலையை விசாரித்தேன் வெறும் நாற்பது ரூபாய் சரி என்று வாங்கி வந்தாச்சு. பயண வழியில் காந்தியும் கூட வருவார் என எண்ணியிருந்தேன். ஆனால் அதுவும் திசை மாறியது. விமான நிலையத்தில் ஏற்பட்ட சில குளறுபடிகளால் அந்த நூல் இருந்த கைபையை அங்கேயே விட்டுவிட்டு வரவேண்டியதாய்ப் போய்விட்டது. மீண்டும் சத்திய சோதனை சோதனை ஆனது.

இப்படி இடையூறுகளுக்கு உள்ளாக்கி கண்கட்டி வித்தை காட்டிய சத்திய சோதனை ஒருவாறு பொதியூடாக கரம் வந்து சேர்ந்தடைந்துள்ளது.

காந்தி உண்மை சொல்லித்தான் இருப்பாரோ என்ற சந்தேகத்தோடு பிரித்து மேயத் தொடங்குகிறேன்....

April 1, 2016

உழைப்பு ஒன்றே உயர்வு


குடந்தை நகர வீதியிலே
குளு குளு மார்கழி காலையிலே
குடித்தேன் ஒரு தேநீரை
குடிசை போன்ற கடையினிலே
அமிர்தம் போல இனித்ததுவே
ஆசையோடு பருகினேனே
கறந்த உடன் பசும் பாலும் - என் போல்
கறுத்த நிறத்து தேநீரும்
சமனாய் கலந்து தரும் போதே - சுவை
சம்மணமிட்டு அமர்ந்ததுவே
பழகத் தாய்போல் இருந்தவளின்
பாசம் கலந்து இனித்ததுவே
மீதிப்பணத்தை வைத்திரென
மனம் நிறைந்து நானும் சொல்கையிலே
உழைப்பு ஒன்றே உயர்வென்று - என்
உள்ளங் கையில் வைத்தனளே
மண்ணில் இப்படி சிலர் இருப்பதாலே
மாதமும் மும்மாரி பொழிகிறதே...

#ஈழத்துப்பித்தன்
01.04.2016

குடந்தை = கும்பகோணம்

March 9, 2016

வற்றாப்பளையில் வாழ்கிறாளாம் கண்ணகி...


ஆழிப் பெருந் தாண்டவம்
அயலில் நடந்தேகிய போதும்
ஊழிப் பெருந் தாண்டவம்
உன் முற்றத்திலே நடந்த போதும்
கண் திறந்து பாராமல் 
கண் மூடி கண்ணகியே! 
கண் துயின்று கிடந்தாயே?

பார் ஆண்ட தமிழினம்
பாழ்பட்டு அழிந்தொழிய
பார்த்திருந்து நீயும்
பதிலுக்கு ஏதும் செய்யாமல்
பல்லாயிரம் உயிர் தின்று - உன்
பசி தீர்த்துக் கொண்டாயோ?

நந்திக் கடல் நீரால்
நாளும் உன் விளக்கெரியும்
விளக்கெரியும் தண்ணீரில்
வித்தாக தமிழர் உயிர்
விதைத்தேதான் போனாராம்
வீறுகொண்டு காக்காமல் - உன்
வீதிக்கு காவலுக்கு எம்
கண்ணகியரை கசக்கியெறிந்த
காமுகரை நிறுத்தி வைக்க நினைத்தாயோ?

அள்ளி முடிந்த கொண்டை
அவிழ்த்தெறிந்து - உன்
பிள்ளைக்கறி திண்டோரை
பலியெடுக்க வாராமல்
பட்டுடுத்தி நீ மட்டும்
பத்திரமாய் இருந்தாயோ?

கருணையின் வடிவென்றும் - எமை
காத்திருக்கும் தாய் என்றும்
கண் கலங்கித் தொழுதோரை
கடைசி வரை காத்தருள வாராமல்
கயவர்க்கு அருள் சொரிந்து எமை
காணாது கிடந்தாயோ?

வரலாற்றில் துடைத்தழிக்க முடியா
வடுச்சுமந்து
வற்றாப்பளையில் இன்னமும்
வாழ்கிறாளாம் கண்ணகி...

#ஈழத்துப்பித்தன்
09.03.2016

February 25, 2016

வெள்ளிப்பனி சொரியுது இங்கே

இலவு தெறிச்சு வெடிச்சது போல்
ஈரப் பனி பறக்குது இங்கு
சாளரம் எல்லாம் சாத்திவிட்டு
சாய்ந்திருந்து ரசிக்கையிலே
இன்னல் உற்ற மனசினிலே
இறுகிக் கிடக்கும் சுமைகளெல்லாம்
பட்டுப் பட்டாம் பூச்சிபோல
பறந்தடிச்சு ஓடுது எங்கோ

கிட்டப் போய் தொட்டுப் பாக்க
கெலி கொள்ளும் மனசை
கிலி கொள்ள வைக்குதிங்கு
கிளர்ந்தெளும்பும் குளிரின் குணம்
கொள்ளை அழகுதான் பனி
கொட்டிக் கிடக்கும் அழகு
கொடுமையாய் இருக்குது
கொடுங் குளிரை நினைக்கையிலே

வந்து இங்கு வாழத் தொடங்கி
வருசம் இருபத்தி அஞ்சு
வரலாற்றில் பதிந்த போதும்
இந்த மண்ணில் ஒட்டாப் பனிபோல
இங்கு எங்கள் வாழ்வும் நகருதென்றும்
பிள்ளை பருவ வாழ்வின் சுவட்டை
பிரித்துப் பிரித்து மேய்ந்து பார்த்து
பின்னை காலமும் நகரும் இங்கே...

#ஈழத்துப்பித்தன்
25.02.2016

(எங்கள் வீட்டுச்சாளரமூடாய் தினமும் காணும் காட்சியின் இன்றைய தோற்றமும் சிலமாதங்களுக்கு முன்னைய தோற்றமும், இன்று வெள்ளிப்பனி சொரிகின்றது)

February 18, 2016

போர் கண்ட வம்சமெடி!!!

போர் கண்ட வம்சமெடி!!!
○●○●○●○●○●○●○●○●○●○

நிலமிடை தமிழ் வீரம்
நாட்டிப் பெண்டிர் நின்று
நீண்ட எல்லைகளின் சாமிகளாய்
நிலம் காத்த மண்ணிலிருந்து
நித்தம் வரும் சேதி கேட்க
நீறு பூத்த நெருப்புபோல்
நெஞ்சம் எல்லாம் கனல்கிறது

அங்கையற் கண்ணிகளாய்
அகிலம் முழுதும் அறிய
ஆயுதம் ஏந்தி நின்று
அசர வைத்த எம் குலப்பெண்கள்
அடி ஒற்றி வந்த பிஞ்சுகள்
அநீதியாய் அற்ப சுகத்துக்காய்
அரக்கர்கள் கரங்களில் மாள்வதோ?

பொறுத்தார் பூமி ஆழ்வாராம்
பொங்கினால் பயனேதும் இல்லையாம்
போங்கடா போங்கடா உங்கள்
பொறுப்பற்ற பதில்களைக் கொண்டு
பொங்கி எழும் தருணம் இது
பெண்டிரே குழல் கொண்டு
போர் கண்ட வம்சமெடி நீங்கள்

போகம் நீ என்று வன் புணர வரும்
பேயர் தனை துவம்சம் செய்ய
போர்க் கலை யாவும் கற்று
பெரும் புயலாக நின்றிறெடி
பேதை அல்ல ஈழம் தந்த
பெண்ணவள் என்றுணர்ந்து
பெருமையோடு வாழ்ந்திடெடி.

#ஈழத்துப்பித்தன்
18.02.2016

February 12, 2016

வாழுகின்ற வல்லமையை வரமாகத் தந்தவர்கள்.

வாழுகின்ற வல்லமையை
வரமாகத் தந்தவர்கள்
மனம் அழும் கணங்களில்
மருந்தாக இருப்பவர்கள்
நோய் பிடித்த உடலம்போல்
நொய்ந்து போகும் தருணங்களில்
நாம் இருக்கிறோம் என
நலம் பாடும் நெஞ்சங்கள்
வாழ்வு இனிக்க வைப்பவர்கள்
வரமாக வந்தவர்கள்
தேன் தந்த சொந்தங்கள்
தெகிட்டாத இன்பங்கள்

#ஈழத்துப்பித்தன்
02.06.2014 - 11.02.2016