Pages

February 12, 2016

வாழுகின்ற வல்லமையை வரமாகத் தந்தவர்கள்.

வாழுகின்ற வல்லமையை
வரமாகத் தந்தவர்கள்
மனம் அழும் கணங்களில்
மருந்தாக இருப்பவர்கள்
நோய் பிடித்த உடலம்போல்
நொய்ந்து போகும் தருணங்களில்
நாம் இருக்கிறோம் என
நலம் பாடும் நெஞ்சங்கள்
வாழ்வு இனிக்க வைப்பவர்கள்
வரமாக வந்தவர்கள்
தேன் தந்த சொந்தங்கள்
தெகிட்டாத இன்பங்கள்

#ஈழத்துப்பித்தன்
02.06.2014 - 11.02.2016

No comments:

Post a Comment

தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.