Pages

February 6, 2016

இளைஞர்களின் கனவே!!!

இளைஞர்களின் கனவே!!!
****************************
விடிகாலை சூரியனின்
விழி தெறித்த மலர் இதுவோ?
செங்காந்தள் மலர் போல
சிறகடிக்கும் விரல் இதுவோ?
சொக்கத்தான் வைத்திடும்
சொர்ப்பனம்தான் இதுவோ?
குலையாத அழகொழிரும்
குமர் இதுவோ?
கலையாத கூந்தலின்
கயல் இதுவோ?
தலை காட்டி நமை ஈர்க்கும்
தளிர் இதுவோ?
நிலை இல்லா வாழ்வினில்
நிலவு இதுவோ?
மலை போல மறைத்து நிற்கும்
மயில் இதுவோ?
பட்டாடை கட்டி வந்த
பவித்திரமும் இதுவோ?
பாரினில் எனை ஈர்த்த
பாவையும் இதுவோ?

இனி வரும் நாளில்
இளைஞர்களின்
கனவு இதுவே!!!

#ஈழத்துப்பித்தன்
03.02.2016

பட உபயம்: Kailase Kanagaratnam
எழுத தூண்டியவர்: Jeyarajan Rajan

2 comments:

நிஷா said...

யாருப்பா இவங்க?

Inuvaijurmayuran said...

இவங்க புதுவரவாம். எல்லாரும் தலையிலை தூக்கி வைச்சு கொண்டாடினம். நாங்களும் ஏன் விடுவான் காலத்தோடை ஓடிப்பார்ப்போம் எண்டுதான்.

Post a Comment

தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.