Pages

April 1, 2016

உழைப்பு ஒன்றே உயர்வு


குடந்தை நகர வீதியிலே
குளு குளு மார்கழி காலையிலே
குடித்தேன் ஒரு தேநீரை
குடிசை போன்ற கடையினிலே
அமிர்தம் போல இனித்ததுவே
ஆசையோடு பருகினேனே
கறந்த உடன் பசும் பாலும் - என் போல்
கறுத்த நிறத்து தேநீரும்
சமனாய் கலந்து தரும் போதே - சுவை
சம்மணமிட்டு அமர்ந்ததுவே
பழகத் தாய்போல் இருந்தவளின்
பாசம் கலந்து இனித்ததுவே
மீதிப்பணத்தை வைத்திரென
மனம் நிறைந்து நானும் சொல்கையிலே
உழைப்பு ஒன்றே உயர்வென்று - என்
உள்ளங் கையில் வைத்தனளே
மண்ணில் இப்படி சிலர் இருப்பதாலே
மாதமும் மும்மாரி பொழிகிறதே...

#ஈழத்துப்பித்தன்
01.04.2016

குடந்தை = கும்பகோணம்

No comments:

Post a Comment

தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.