எண்ணங்களில் ஓர் நிழல்,
நெஞ்சின் மறைமுக மலர்,
பல நாள் தேடிய கனவு,
இன்று கண்முன் நின்றது…
அவள் வருவாள் என நினைக்காத வேளை,
அலைபோல் வந்து நின்றாள் புன்னகையோடு,
நான் சொல்ல நினைத்த வார்த்தைகள்,
எல்லாம் காற்றில் கரைந்துபோனது…
பேசும் அவள் குரலில்,
புது உலகம் விரிந்தது,
மறைத்த காதல் நெஞ்சில்,
ஒளி கண்டது, உயிர்க் கீதம் மலர்ந்தது…
இச்சிறு தருணம் போதும்,
ஒரு ஆயுளுக்கு நினைவாக,
அவள் அருகில் வந்த அந்த நிமிடம்,
என் வாழ்வின் இனிய சங்கீதமாக…
#ஈழத்துப்பித்தன்
25.082025