Pages

June 5, 2012

பாலைவனத்தில் பந்தாடும் சிறுத்தைகளுக்கு...


பாலைவன தேசத்தில் எங்கள் சிறுத்தைகளின் பந்தாட்டம்
பக்கம் இருந்து பார்க்கின்ற கொடுப்பனவு எமக்கில்லை
எட்ட நின்றாலும் பக்கம் வந்து உணர்வாலே உம்மை
பாடி வைக்க தமிழ்தாய் வரம் தந்ததால் பாடுகின்றேன் உம்மை

வெற்றித்திலகமிட்டு வாழ்த்துகின்றோம் வீரரே !
வென்று வாரும்.
சாவினிற்க்கு அஞ்சாதோர் மீது
சாற்றிய கொடியொடு சென்றுள்ளீர்
நிச்சயம் வென்றுதான் வருவீர்!!!

குண்டடிபட்ட எம் தேசக்கொடி
பந்தடிக்கும் வீரரே!
உம்மால் பாரினில் பறக்குது இன்று
காணொளியில் கண்டதுமே கை கூப்பித் தொழுகின்றோம்
கதிரவன் உதிக்கும் திசை நோக்கி

எத்தனை ஆயிரம் வீரர்கள் குருதி தந்து காத்த கொடி
உங்கள் கைவசம் இருந்திடும் கர்வத்தோடு களம் காணுங்கள்
நிச்சயம் உம்மோடு நிழல் போல நின்றாடுவர்
வித்தாகிப் போன எங்கள் வீர மறவர்கள் - அவர்
உடன் இருந்து உரம் கொடுப்பார் - அந்த
உறுதியோடு வாகை சூடி வாரும்
வந்தும்மை வரவேற்கக் காத்திருக்கிறோம்.

1 comment:

Anonymous said...

Fаntaѕtic goοds from you, mаn. I've understand your stuff previous to and you are just too magnificent. I really like what you have acquired here, certainly like what you are stating and the way in which you say it. You make it entertaining and you still care for to keep it sensible. I cant wait to read much more from you. This is actually a terrific site.
Have a look at my web page - Wie baut man ein eine Gartenlaube?

Post a Comment

தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.