Pages

March 17, 2013

மரணத்தறுவாயிலும் மறக்கோம் உங்களை...

  • முள்ளிவாய்க்காலோடை எல்லாம் முடிஞ்சுது - இனி
    முதுகு சொறியும் நிலைதான் தமிழர் நிலை என்றிருந்தோம்
    தம்பியர் தூண்டி விட்ட திரியில்
    துயருற்றிருந்த - எங்கள்
    மனங்களில் மத்தாப்பு பூக்கின்றது
    மலரும் எங்கள் தேசம் என்ற
    மமதையில் நிற்கின்றோம்.

    அள்ளி அணைத்து ஆதரிக்க எங்கள்
    அன்னை தமிழகம் இருக்கின்றது
    சுற்றி வரும் பகை யுடைத்து
    சுதந்திரத்தை பெற்றுத்தர - திலீபனின்
    வழியில் பல்லாயிரம் தம்பிகள் அங்கே
    விழி திறந்து விடுதலைக்காய்
    வழி திறந்து விட்டிருக்க
    வார்த்தைகள் ஏதுமின்றி மகிழ்கின்றோம்

    கந்தகக் களஞ்சியத்துள் வீழ்ந்திட்ட சிறுபொறிபோல் - அகிலத்தை
    கலங்கடிக்கும் அருஞ்செயல் கண்டு மீள நாம் துளிர்க்கின்றோம்
    கலங்கிக் கிடந்த எங்கள் கண்கள்
    கல்லூரி மாணவரே உங்கள் கரங்களால் துடைக்கப்படுகின்றது - எங்கள்
    திலீபனின் வழியில் நீங்கள் தொடுத்து நிற்கும் போர்
    தீச் சுவாலையாய் தமிழகம் தாண்டி
    தமிழன் வாழும் இடமெல்லாம் பரந்துவிட்டது

    எல்லாம் இழந்தோம் என்றிருந்தோம்
    உங்களைக் கை விடோம் நாம் இருக்கின்றோம் என்று
    உணவு தவிர்த்து உடல் வருத்தி நீவீர்
    உணர்வோடு காட்டுகின்ற அக்கறையில்
    உளம் மகிழ்ந்து நிற்கின்றோம்
    வார்த்தைகள் வரவில்லை
    வலுவிழந்த இனத்திற்கு வடிகால்களாய் நீங்கள்
    வந்தீர்கள் வான தூதர்களாய்
    மரணத்தறுவாயிலும் மறக்கோம் உங்களை...

1 comment:

நிலாமதி said...

திலீபனின் வழியில் நீங்கள் தொடுத்து நிற்கும் போர்
தீச் சுவாலையாய் தமிழகம் தாண்டி
தமிழன் வாழும் இடமெல்லாம் பரந்துவிட்டது.....

பாராட்டுக்கள் மயூரன் .உலகெங்கும் தீ மூண்டு அந்த தீ கொழுந்துவிட்டு ஒரு தீ ர்வை தரவேண்டும் ..நமக்கு இல்லாவிடாலும் நம் வம்சத்துக்கு வேண்டும்.

Post a Comment

தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.