எனக்குள் ஒருவன் இருக்கின்றான்
அதிகமாய் அவன்தான் என்னை ஆள்கின்றான்
அதிக தடவை அவனை ஆள நான் நினைத்ததுண்டு
அது நினைப்போடே போன சம்பவங்கள் நிறையவுண்டு
அவன் சொற்கேட்டு ஆடிய போதெல்லாம் - இந்த
அவனியே என் காலடியில்
அடைக்கலம் போல் தோன்றும்
அகங்காரம் நெஞ்சமெல்லாம் குடி கொள்ளும்
அவனை நான் எதிர்த்து ஆள முனைந்தபோது
அவனியில் புகழாலே ஓங்கியதுண்டு - என்
ஆழ் மனமும் ஆண்டவன் குடியிருக்கும்
ஆலயம் போல் அமைதியானதுண்டு.
01.06.2004
No comments:
Post a Comment
தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.