Pages

March 10, 2022

இளவேனில்




 மழலை பாடல் தொகுப்பொன்றுக்காக எழுதப்பட்டது.

இளவேனில்

************

வானம் மெல்ல வெளிக்கின்றது - எம்

மனமும் அதுபோல் சிரிக்கின்றது

பூமி மேனி சிலிர்க்கின்றது

பூக்கள் அங்கே முகிழ்க்கின்றது


பச்சை வர்ணம் தெறிக்கின்றது

பசும்புற் தரைகள் விரிகின்றது

பகலாய் இரவும் ஒளிர்கின்றது

பகலவன் ஆட்சி நடக்கின்றது


எங்கும் பூக்கள் நிறைகின்றது

எந்தன் மனமும் மகிழ்கின்றது

தேனீ பறந்து திரிகின்றது

தேடித் தேனை புசிக்கின்றது


மழலை மனங்கள் நிறைகின்றது

மகிழ்ந்து துள்ளிக் களிக்கின்றது

கவலை எல்லாம் பறக்கின்றது

கதிரின் ஒளிபோல் ஒளிர்கின்றது


இணுவையூர் மயூரன்

#ஈழத்துப்பித்தன்

18.02.2021

No comments:

Post a Comment

தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.