முப்பது ஆண்டுகள் கழித்து முளைக்கின்றது
எம்மை அழித்து புதைத்த எச்சங்கள்
நீரின்றி நசுங்கிய நிலத்திலே
நினைவுகள் எலும்பாக முளைக்கின்றன.
ஒரு காலத்தில் கதறல்கள் கட்டுப்பட்ட இடம்
இப்போது மௌனமாகப் பேசுகிறது
அந்த மண் உரைத்த கதைகள்
முகங்களற்ற எலும்புகளாக நின்று போதிக்கின்றன.
பதுக்கி ஒழிக்கப்பட்ட பிஞ்சுப் பாதங்கள்
பளிச்சென்ற ஒளியாக மிதந்து வருகிறது,
நம் குரல்களின் மௌன வடிவம்
இனி உலகின் சிந்தையை கலைக்கட்டும்
#ஈழத்துப்பித்தன்
29.06.2025
#செம்மணி
No comments:
Post a Comment
தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.