Pages

May 18, 2012

சிவந்த மேயின் பதினெட்டாம் நாள்


சிவந்த மேயின் பதினெட்டாம் நாள் - எம்
சிந்தைகள் கலங்கிப் போன நாள்
முள்ளிவாய்க்காலில்
மனிதம் மரணித்த நாள்
உயிர் வலி சுமந்து
உலகம் முழுவதிலிலும் நாம் இணைந்து
உலகின் மனச்சாட்சியை
ஒட்டு மொத்தப் பலமும் கொண்டு
ஒலுப்பி எடுத்த நாள்
எங்கள் உயிர் அழுத நாள்
உணர்வுகள் தழிழராய்
ஒருங்கிணைந்த நாள்
மீண்டும் ஒரு முறை ஒருங்கிணைவோம்
உயிர்வலி சுமந்து உதிரம் சொரிந்த எங்கள்
உறவுகளின் உணர்வுகள் உயிர்பெற

1 comment:

Post a Comment

தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.