Pages

July 3, 2015

 பெரு மஞ்சம் ஏறி வரும் நாயகனே


அற்புதங்கள் இலங்குகின்ற இணுவையிலே
அருளாட்சி செய்கின்ற அரும்பொருளே!
பொற்பதம் தேடி வரும் அடியவரை - உன்
புன்னகையால் கட்டி வைக்கும் பேரரசே!
பெரு மஞ்சம் ஏறி வரும் நாயகனே - உன்
பெயர் சொல்லும் உலகெங்கும் தமிழினமே
வரலாறாய் வாழ்கின்ற வல்லமையே! - எம்
வாழ்விற்கு வழியான வடிவேலவனே!
ஊர் துறந்து வாழுகின்றோம்
உனை காணாது ஏங்குகின்றோம்.
பேர் அருள் புரியும் பெருமகனே!
ஊர் காணும் உன் விழாக் காண
அருள் தாரும் ஐயா!

No comments:

Post a Comment

தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.