Pages

June 20, 2021

தன் மீது சுமத்தப்பட்ட வரலாற்றுக்கறையை திமுக துடைத்துக்கொள்ளுமா?

கால நகர்வு புலிகளை வரலாற்றில் இருந்து மறைத்துவிடும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இறுதிப்போர் நடைபெற்று புலிகள் அழிக்கப்பட்டு 12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் புலிகளை வரலாற்று நீக்கம் செய்ய முடியாது தோற்றவர்கள் அடுத்த கட்ட நகர்வுக்கு தயாராகிவிட்டார்கள்.  


மிக உக்கிரமாக தமது புலிநீக்க அரசியல் நகர்வுகளை பல வழிகளிலும் ஆரம்பித்துவிட்டார்கள். அதன் வெளிப்பாடு சம நேரத்தில் பமிலிமான் 2, ஜகமே தந்திரம் திரைப்படங்களாகவும் திமுக அபிமானிகளின் மகிந்தவின் நண்பரனான நொயல் நடேசன், எரிக் சொல்கைம் போன்றவர்களுடான் நேர்காணல்களாயும் வெளிவரத் தொடங்கியுள்ளது. 


இறுதிப் போரில் தமிழினம் அழிய கலைஞர் துணை போனார் எனச் சொல்லப்படுவது சந்தர்ப்பவசமே என இன்றும் கலைஞருக்காக பச்சாதாபப்படும் ஈழத்தமிழர்களின் முகத்தில் கரி பூசும் செயலை திமுகவின் மாநிலத் துணைச் செயலாளர் இசை போன்றோர் கன கச்சிதமாய் செய்து வருகின்றார்கள்.


திமுக தலைமை, ஈழத்தமிழர் நலனே எனது நலன் என மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லும் திமுக ஆட்சியில் அங்கம் வகிக்கும் மதிமுகவின் பொதுச் செயலர் வைகோ போன்றோர் இனியும் அமைதி காக்காமல் இந்த வரலாற்று திரிப்பு முயற்சியை தடுத்து நிறுத்த ஆவன செய்ய வேண்டும்.


இன்றைய எரிக் சொல்கைமுடனான விவாதத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் இவர்களின் மனநிலையைச் சொல்லும்.


இவர்கள் எல்லாம் மனிதர்கள் தானா ??


1. ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள் தான் கொன்றார்களா? 

எரிக் சொல்கைம்: ஆம், ராஜூவ் காந்தியை கொன்றது விடுதலைப் புலிகள் தான். இதை அன்ரன் பாலசிங்கம் என்னிடம் சொல்லியிருக்கிறார். 


2. ராஜூவ் காந்தியைப் போன்று அமைதி பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில் முக்கிய பங்காற்றிய லக்‌ஷ்மன் கதிர்காமரையும் விடுதலைப் புலிகள் கொலை செய்தார்களே அதைப் பற்றி சொல்ல முடியுமா?


3. பிற தமிழ் போராளி குழுக்களையும் விடுதலைப் புலிகள் படுகொலை செய்தது பற்றிய உங்கள் கருத்து?


4. இறுதிக்கட்டப் போரில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு பிரபாகரனின் போர் வெறி தான் காரனமா? 


5. புலிகள் தங்களுக்கான நிதியை எப்படி திரட்டினார்கள்? போதைப் பொருட்கள் கடத்தலில் ஈடுப்பட்டதாக சொல்லப்படுகிறதே?


6. அன்ரன் பாலசிங்கத்தின் பங்களிப்பு இல்லையென்றால் பிரபாகரன் ஒரு போர் நாயகனாகத் தானே விளங்கியிருப்பார்?


7. புலிகள் குழந்தைப் போராளிகளை வலுக்கட்டாயமாக போரில் சேர்ததது பற்றியும், அதன் காரனமாக சர்வதேச சமூகத்தில் தமிழர் பிரச்சனைகள் தொடர்பாக ஏற்பட்ட எதிர்மறைப் போக்கையும் பற்றி விவரிக்க முடியுமா?


8. ராஜூவ் காந்தி படுகொலை மூலம் விடுதலைப் புலிகள் செய்த வரலாற்றுப் பிழையால் என்ன விளைவுகள் உருவானது? (டான் அசோக்)


9. இறுதிக்கட்ட போர் முடிந்த 11 ஆண்டுகள் கழித்தும் விடுதலைப் புலிகளின் வன்முறை போக்கை ஆதரிப்பது ஈழத்தமிழ் குழந்தையிடத்தில் புத்தகத்தை பிடுங்கிக் கொண்டு துப்பாக்கியைக் கொடுப்பது போலாகாதா?


10. ஐரோப்பிய நாடுகளில், வெளிநாடுகளில் சொகுசாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழர்களால் ஈழத் தமிழர்களுக்கான தீர்வைத் தேடித் தர முடியுமா?


11. பிரபாகரனுக்கு நீங்கள் ஏதும் பரிசு பொருட்களைக் கொடுத்திருக்கிறீர்களா?

அப்படியேதும் கொடுத்ததில்லை என்ற கூறிய எரிக் சோல்ஹேம், அமைதி பேச்சுவார்த்தையில் அவர்களை தொடர்பு கொள்வதற்காக இலங்கை அரசின் ஒப்புதலோடு ரேடியோ ஸ்டேஷன் ஒன்றை வழங்கியதாக கூறினார். அதைக் குறிப்பிட்டு அரக்கர் கும்பலைச் சேர்ந்த ரவிசங்கர்,' புலிகள் அதை பாட்டு கேட்பதற்காக பயன்படுத்தியிருப்பார்கள்' என நக்கலடித்தார். 


12. துப்பாக்கிகளோடும், புலியோடும் புகைப்படங்கள் நிறைய எடுத்திருக்கிறாரே பிரபாகரன் ஒரு நாடக நடிகை மனோபாவம் உடையவரா (Is prabhakaram a drama queen)?


*****


ஒரு இன விடுதலையே அழிக்கப்பட்டு,நாதியற்று நிற்கும் அந்த இனத்தின் மீது இப்படி என்ன வன்மம் இந்த கும்பலுக்கு ???


தன் மீது சுமத்தப்பட்ட வரலாற்றுக்கறையை திமுக துடைத்துக்கொள்ளுமா?


@InuvaijurM

No comments:

Post a Comment

தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.