Pages

December 5, 2024

தேரிக்காட்டில்…

 தென் தமிழகம் மீது எனக்கு எப்பொழுதுமே தீராதகாதலுண்டு. கன்னியாகுமரி தாண்டி திருச்செந்தூர் நோக்கிய வழித்தடத்தில் பயணம் செய்யும் போது எங்கள் ஊருக்கு போன உணர்வு வரும்.

பனைமரங்களும் செம்மண் தரையுமான தேரிக்காடு பார்ப்பதற்கு பேரெழில் கொஞ்சும் பகுதியாகும்.


தோகை விரித்தாடும் மயில்களும் மரமுந்திரி எனப்படும் கயூ மரங்களும் அதிகம் காணப்படும் பூமி. செம்மண் வெளி, செம்மண்வெளியை எட்டிக்கடந்தால் பால் போன்ற வெள்ளை மணலும் பக்கமெங்கும் விரிந்த இந்துமா கடலும். 

இந்தப் பூமியின் அழகு போலவே இங்கு வாழும் மனிதர்களும். 

தம்பி ராம் மற்றும் அவரின் துணைவி கஸ்தூரி ஆகியோரின் சொந்த ஊர் இந்தப்பகுதியில் அமைந்துள்ளமையால் இந்தப் பகுதிக்கு செல்லும் வாய்ப்பும், அனுசரித்து விருந்தோம்ப தாராளமான உறவுகளும் அங்குள்ளார்கள்.

நாம் வருவதாக அறிந்ததுமே தடல் புடலான ஏற்பாடுகள். பல விடயங்களை உணவுப்பண்டங்களை படமெடுக்க மறந்தளவு உபசரிப்பு.

கஸ்தூரியின் அக்கா வீட்டில் மதிய உணவு. உடன் கடலில் பிடித்து வந்த விளைமீனில் பொரியல், நாட்டுக்கோழி அடிச்சு அரைச்ச கறி, கோழி 65 பொரியல் உண்மையில் சுவை சொல்லி வேலையில்லை. 

பின்னேரம் ஆடி மாதம் அம்மனுக்கு ஊத்தும் இனிப்புக் கூழ் உவரி கடற்கடையில் அலையாடல், மண் சட்டி ஐஸ்கிறீம், மறுநாள் காலையில் பதநீர், நொக்கு சர்பத் இப்படியாக தென் தமிழகத்தில் பயணம் தொடர்ந்தது…

இணுவையூர் மயூரன்

யூலை 2024









No comments:

Post a Comment

தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.