Pages

December 9, 2024

சூடான திராட்சை மது (Glühwein)


ஐரோப்பிய நாடுகளில் குளிர்காலம் ஆரம்பித்து விட்டால் இந்த சூடான திராட்சை மதுவும் விற்பனைக்கு வந்துவிடும்.

குறிப்பாக நவம்பர் மாதத்தின் இறுதி வியாழக்கிழமை அன்று நத்தார் சந்தை ஆரம்பமாகும். நத்தார் சந்தை என்பது இரவு வேளைகளில் களை கட்டும். இச் சந்தைகளில் பல்விதமான பாரம்பரிய உணவுப்பண்டங்கள் சுடச் சுட சந்தையின் தெருக்கடைகளில் விற்பனையாகும். 

மிகவும் குளிரான காலநிலையில் அந்த குளிருக்கு உடல் ஈடுகொடுத்து தாங்கிக்கொள்ளும் வல்லமையை பெறுவதற்காக இந்த நத்தார் சந்தைகளில் சூடான திராட்சை மது விற்பனையாகும். 

சிவப்பு மற்றும் வெள்ளை வைன் இரண்டுமே இவ்வாறு சூடாக விற்பனை செய்யப்படும். 

திராட்சை மதுவுடன் கறுவாப்பட்டை, கராம்பு, நட்சத்திரப்பூ, தோடம்பழ துண்டுகள், தோடம்பழச்சாறு, கரும்புச் சீனி, ரம் போன்றவை சேர்த்து காய்ச்சி சூடாக வெட்டிய பழத்துண்டுகளுடன் பரிமாறப்படும். 

மதுவை சூடாக்கும் போது அதிலுள்ள மதுசாரத்தின் வீரியம் குறைந்து உள்ச்சேர்க்கைகளின் தன்மையும் சுவையும் அதிகரித்து உடலை கதகப்பாக்கி குளிரை தாங்கும் தன்மையை இந்தப் பானம் வழங்கும்.

இணுவையூர் மயூரன்

09.12.2024

No comments:

Post a Comment

தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.