சாளரங்களை திறந்து பார்க்கிறேன் மழை
சதிராடிக்கொண்டிருக்கிறது
துளிகளாய் விழுந்து கண்ணில் நனைக்க
தூய நினைவுகள் ஒவ்வொன்றாய் மலர்கின்றன
வெற்றிட மனதின் ஓரம் தொட்டு
வெண்முகில் கண்ணீராய் வழிகின்றது
காற்றின் ஸ்வரத்தில் சொல்லாத கவிதைகள்
கரையாத உணர்வாய் நெஞ்சில் பெருகின்றது
மழை துளிகள் மண் மீது மட்டும் அல்ல - என்
மனதின் மீதும் பொழிகின்றது.
#ஈழத்துப்பித்தன்
10.02.2025

No comments:
Post a Comment
தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.