வெள்ளெண கோழி கூவ முன்னமே எழும்பி
எண்ணிலா வேலைகள் செய்யிறா அம்மா
திண்ணையில் கிடந்து திமிர் முறிக்காமல்
தண்ணி வார்க்கப் போகும் அப்பா
கிட்டி விளையாட கூடிய பெடியள்,
மண்பானையை நொருக்கி சத்தம் கேக்க
நடுவீட்டில் தண்ணி ஒழுகிக் கிடந்தது,
“எவனடா உடைச்சது!” என்று கத்தும் அக்கா.
வீட்டுக் கூரையில் தூக்கணாங் குருவிகள்,
வெள்ளிக்கிழமை பிள்ளையாரின் மணி ஒலி
எட்டிப் பாத்தா புக்கை பொங்கிப் படையல்,
பெரியம்மா பூவரசம் இலையோட போறா.
பக்கத்து வீட்டுப் பெட்டை படலை திறந்து,
“பா பா இஞ்ச!” எண்டு கோழியை கூப்பிடும்,
“அப்பாடி” எண்டு விட்டு வெக்கமாய் சிரிச்சபடி,
அங்கையும் இஞ்சையும் சுத்திப் பாக்கும் குமார்.
மழைக்காலம் வந்தால் மண் வாசம் வீசும்,
தகரப் பேணியில் தட்டி விளையாடும்,
குஞ்சக்காவின் சின்னப் பெடி, அந்த வாசல் நிலையிலை சாஞ்சபடி ரசிச்சதை மறக்கேலாது
எவ்வளவோ தூரம் போனாலும் மறக்கேலாது,
அந்தச் சத்தங்களும் தலைவாசலும் வாசங்களும்,
யாழ்ப்பாணத்து வீட்டு வாசலின் ஞாபகங்கள்
நெஞ்சோட நிண்டு பூவாய் பூக்குது இண்டைக்கும்
#ஈழத்துப்பித்தன்
04.02.2025
No comments:
Post a Comment
தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.