சுவிற்சர்லாந்தில் சட்டரீதியாக தோற்றுவிக்கப்பட்ட முதன்மையான தமிழ்ப்பாடசாலை பாசல் தமிழ்ப்பாடசாலை ஆகும். 1992 ஆம் ஆண்டு Freiplatzaktion (FPA) உதவி அமைப்பினால் இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் FPA அமைப்பு ஆதரவளித்த போதிலும், பாசல் தமிழ்ப்பாடசாலை சுயாதீனமாகத் தனது கல்வித்தொழிலை மேற்கொண்டு வந்தது.
காலந்தோறும் FPA அமைப்பிற்கும் தமிழ்ப்பாடசாலைக்கும் இடையில் தொடர்பாளர் நியமிக்கப்பட்டு, அந்த ஒத்துழைப்பும் பணித் தொடர்ச்சியும் பேணப்பட்டன.
அத்தகைய தொடர்பாளர்களில் ஒருவராகச் செயல்பட்டு, தமிழ்மாணவர்கள் தமது மொழிக் கல்வியை தொடர அரசமைப்பு, கல்வி மற்றும் சமூக மட்டங்களில் பல்வேறு உதவிகளை செய்து வந்தவர் திருமதி மீரியாம் (Miriam Solveig Forrer-Clauberg) ஆவார்.
இவர் தமிழ் மக்களின் இருப்பிற்கும் இளைய தலைமுறையினரின் வளர்ச்சியிலும் ஆழமான அக்கறையும் மேம்பாட்டிற்கும் உதவியுள்ளார். தனது இளமைக் காலத்திலேயே புலம்பெயர் சமூகம் தொடர்பாகவும் அகதிகளுக்கான உரிமைகளை பெற்றுக் கொடுப்பதிலும் பல தளங்களில் பணியாற்றியுள்ளார்.
தமிழ்மொழி கல்விக்கான அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்ட அவர், தமது 46 ஆவது வயதில் 22.10.2025 அன்று இயற்கை எய்தினார்.
தமிழர் கல்வி வளர்ச்சிக்கு அவர் வழங்கிய அருமையான பங்களிப்புகள் என்றும் நினைவில் நிலைத்திருக்கும். அவரின் சேவையை நெஞ்சில் நிறுத்தி மனமார்ந்த வணக்கத்துடன் நினைவு கூறுகின்றோம்.
நினைவுகளுடன்
இணுவையூர் மயூரன்

No comments:
Post a Comment
தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.