அசைவற்ற ஆசையை சொல்லி
அவா நீக்கப் போதித்தவர் - அவர் வழி
அந்த மார்க்கம் ஏந்தியவர்கள் இன்று
மண் ஆசை மாயையில் மிதக்கின்றனர்.
துறவின் தொண்டை தாங்கி வந்த கைகள்
தரையைத் தழுவி எதற்கோ ஏங்க,
அதே புத்தனின் பெயரைச் கொண்டு
ஆக்கிரமிப்பின் வழி அடியெடுத்து நிற்கின்றனர்
தியாகத்தின் தீபம் ஏற்ற வேண்டியோர்
தம் கொள்கைக்கே தீ வைத்ததுபோல்,
போதனையின் புனிதத்தை மறந்து
பொய்யான பேராசையில் கலந்து போகின்றனர்.
#ஈழத்துப்பித்தன்
16.11.2025
படம்: எங்கள் வீட்டின் வரவேற்பறையில் உள்ள புத்தரின் ஓவியம்.
“புத்தரைத் தமிழர்கள் யாரும் வெறுப்பதில்லை;
புத்தரின் பெயரும் சின்னமும் நிலப்பரப்பு ஆக்கிரமிப்புக்காக பயன்படுத்தப்படும்போதே அதற்கு எதிர்ப்புத் தோன்றுகிறது.”
#புத்தர்சிலை #திருகோணமலை #buddha #BreakingNews

No comments:
Post a Comment
தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.