Pages

November 22, 2020

மலாய் அன்ரி அவிச்ச அரிசிமாப்புட்டு


உண்ணலும் உலாத்தலும் என் இரு கண்கள் இது உலகம் அறிஞ்ச ரகசியம்.

எங்கை போகத் திட்டமிட்டாலும்  அந்த இடங்களைப்பற்றி அறிய முதலே அங்கே என்ன என்ன சாப்பாடு கிடைக்குமென தேடிப் பட்டியலிடுவதே எனது முதற் கருமம்.

இப்படியாக நான் போகுமடங்களில் தேடித்தேடி அந்தப் பிரதேசங்களில் அடையாள உணவுகளையும் அங்கு கிடைக்கும் சிறப்பு உணவுகளையும் உண்பேன்.

இப்படித்தான் கடந்த 2017 இல் மலேசியா போன போது ஒரு நாள் சட்டிச் சோறு சாப்பிட்டுருந்தேன் அதன் சுவைக்காகவே கடந்த ஆண்டு மீண்டும் ஒரு தடவை இருநாள் பயணமாக மலேசியாவுக்கு போனது தனிக்கதை.

இப்படி சாப்பிட்ட சட்டிச் சோற்றின் சுவையால் ஈர்க்கப்பட்டு மறுநாளும் போனால் அன்று அந்தக் கடை பூட்டு முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டு லிட்டில் இந்தியா வீதியில் அலைந்த என் கண் எதிரே மலேசியா மலாய் அன்ரி ஒருத்தி வீதியில் வைத்தே குழல் புட்டவிக்கும் காட்சியைக் கண்டதும் சொர்க்கமே கண்ணெரே தெரிந்தது போல் இருந்தது. 

சரி என்று போனா கடை வாசலில் வைத்து புட்டு அவிபடுது. வெள்ளை அரிசிமாப் புட்டும் குரக்கன் மா புட்டும் குழலாத தள்ளத் தள்ள ஆவி பறக்க விற்பனை சூடுபிடிக்குது. சரியென்று நானும் புட்டுக்கு சொல்லீட்டு இருந்தா முதல் சுற்றுக்கு வெள்ளை அரிசிமாப் புட்டும் வாழைப்பழமும் சர்க்கரை தூளும் வந்துது. அடுத்த சுற்றுக்கு திரும்பிப் பார்த்தா அத்தனை வகை கறியும் இருந்துது. விரும்பியதை எடுத்து வந்து சாப்பிடலாம்.

இரண்டாம் சுற்றை மீன்குழம்பு கத்தரிக்காய்/உருளைக்கிழங்கு பொரியலோடையும் குழைச்சு பிடிச்சு அடிச்சிட்டு வந்தன். அடுத்தநாள் வரை நின்று பிடிச்சுது.

சும்மா சொல்லக்கூடாது புட்டுக்கு பிரபலமான யாழ்ப்பண, கேரளா புட்டு எல்லாம் சாப்பிட்டிருக்கிறன் அதெல்லாத்தையும் விட விட மலேசியன் புட்டு மிருதுவாகவும் சுவையாகவும் இருந்துது. 


புட்டு பற்றி புட்டுப் புட்டு வைப்பேன்


புட்டு பற்றிய ஆய்வுக்காக


புட்டுப் பிரியன் மயூ

No comments:

Post a Comment

தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.