அன்புக்குரிய உறவுகள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
வாசலிலே வண்ணக் கோலம்
வடிவழகாய் பூக்கட்டும்!
வான் அரசன் கதிரவனும்
வந்து நின்று பார்க்கட்டும்!
வட்டப் புதுப்பானை
வாயெல்லாம் பொங்கட்டும்!
வந்தது தை என்று
வாழ்த்தொலிகள் பரவட்டும்!
வண்ணத் தமிழ் இனிக்க
வரவேற்கும் பண்பு தொடரட்டும்!
மஞ்சள் இலை இஞ்சி இலை
மங்கலத்தை கூட்டட்டும்!
மயில்த் தோகை விரிந்தது போல்
மாக் கோலம் ஒளிரட்டும்!
மாவிலையும் தோரணமும்
மகிழ்ந்து எங்கும் ஆடட்டும்!
மத்தாப்பாய் புன்னகைகள்
மலர்த்து எங்கும் வீசட்டும்!
மண் உழுத உழவர்
மாண்பு எங்கும் பரவட்டும்!
துன்பங்கள் தொலைந்து எம் வாழ்வில்
இன்பம் என்றும் நிலைக்கட்டும்!
இணுவையூர் மயூரன்
#ஈழத்துப்பித்தன்
01.2021
அன்புடன்
இணுவையூர் மயூரன்
வாசலிலே வண்ணக் கோலம்
வடிவழகாய் பூக்கட்டும்!
வான் அரசன் கதிரவனும்
வந்து நின்று பார்க்கட்டும்!
வட்டப் புதுப்பானை
வாயெல்லாம் பொங்கட்டும்!
வந்தது தை என்று
வாழ்த்தொலிகள் பரவட்டும்!
வண்ணத் தமிழ் இனிக்க
வரவேற்கும் பண்பு தொடரட்டும்!
மஞ்சள் இலை இஞ்சி இலை
மங்கலத்தை கூட்டட்டும்!
மயில்த் தோகை விரிந்தது போல்
மாக் கோலம் ஒளிரட்டும்!
மாவிலையும் தோரணமும்
மகிழ்ந்து எங்கும் ஆடட்டும்!
மத்தாப்பாய் புன்னகைகள்
மலர்த்து எங்கும் வீசட்டும்!
மண் உழுத உழவர்
மாண்பு எங்கும் பரவட்டும்!
துன்பங்கள் தொலைந்து எம் வாழ்வில்
இன்பம் என்றும் நிலைக்கட்டும்!
இணுவையூர் மயூரன்
#ஈழத்துப்பித்தன்
01.2021
அன்புடன்
இணுவையூர் மயூரன்
No comments:
Post a Comment
தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.