Pages

January 7, 2021

அடையாளம்

 


தமிழர் தங்கள் அடையாளங்களை பேணுவது அல்லது மீட்டெடுப்பது அல்லது தக்க வைப்பது சிலருக்கு தமது இன அடையாளங்களை அழித்துவிட வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதில் சிக்கலாய் அமைகின்றது. 


அதன் வெளிப்பாடு வேட்டி நாளை கொண்டாடியவர்கள் கோவணநாளை கொண்டாடுவார்களா எனத் தொடங்கி பல வழிகளிலும் தமது எதிர் மனநிலையை கக்கத் தொடங்கியுள்ளார்கள்.


இத்தகைய கொண்டாட்ட மனநிலையூடாக அநாகரீக உடை என ஒதுக்கப்பட்ட வேட்டி கொண்டாட வேண்டிய உடை என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் விதைக்கப்படுகின்றது.


சில காலங்களாக திருமணங்களில் கூட மாப்பிளை வேட்டி கட்டுவதை தவிர்த்து வடநாட்டு உடைகளுக்கு மாறும் கொடுமைகள் எம் இனத்தில் மட்டுமே நிகழும் மிகப்பெரும் அடையாளத் தொலைப்பாகும்.


சிங்களவர்கள், யூதர்கள், சீக்கயர்கள், முஸ்லீம்கள், ஆபிரிக்கர்கள் இந்தியாவின் ஏனைய மாநிலத்தவர்கள் எவர்களுமே தங்கள் பாரம்பரிய ஆடை அணிவதை, அதை கொண்டாடுவதை பெருமையாக நினைக்கின்றார்கள். எந்த வசதி படைத்தவர்களாக இருந்தாலும் தங்கள் குடும்ப, பண்பாட்டு விழாக்களில் தங்கள் பாரம்பரிய உடைகளைத்தான் அணிகின்றார்கள்.


மன உறுதியையும், ஒருவித திமிரையும், கெத்தையும், அழகையும், கம்பீரத்தையும் தரும் வேட்டி என் பண்பாட்டு உடை என்பதை பெருமையோடு சொல்வேன். வாய்ப்புக் கிடைத்த தருணங்களிலும் வாய்ப்பை உருவாக்கியும் அணிவதில் மகிழ்வும் பெருமையும் கொள்கின்றேன்.


தைக்காமால் ஒரு உடை அணியப்படுகின்றது என்றால் அது தமிழனின் பாரம்பரிய உடையாக மட்டுமே இருக்கும்.


தாழ்வு மனப்பாண்மையை தகர்த்தெறிந்துவிட்டு எங்கள் அடையாளங்களை கொண்டாடுவோம்.


நன்றி வணக்கம்

No comments:

Post a Comment

தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.