Pages

November 19, 2022

ஈழத்தின் தொன்மையான இணுவை.


விஜயன் வருகைக்கு முன்னரே தமிழர் ஈழத்தை ஆண்டனர். ஆதாரங்கள் இணுவிலில்.


குமரிக்கண்டத்தில் அமைந்த தமிழ்ச் சங்கங்களில் ஒன்று இணுவிலில் அமைந்திருந்ததாகவும் அதன் எச்சங்கள் மண்ணுள் புதைந்துள்ளதாகவும் அவற்றை இன்றும் பூதங்கள் காப்பதாகவும் சிறு வயதில் மூத்தவர்கள் காவி வந்த செவி வழிச் செய்திகளினூடாக அறிந்துள்ளேன். 


அதனால்தான் அந்த மண்ணில் வேறெங்கிலும் இல்லாத அளவில் தமிழும் சைவமும் செழித்து வளர்வதாகவும், சிவனின் ஆட்சி நிலவும் சிவபூமியாக திகழ்வதாகவும் குறிப்பிடப்படுகின்றது. 


இன்று பார்த்தால் கொழும்பு தமிழ்ச் சங்கம் உட்பட உலகம் முழுவதிலும் தமிழ் சார் அமைப்புக்களையோ சைவ ஆலயங்களையோ நிறுவி தமிழ் சைவ பணிகள் தொடர வழி வகுப்பதில் முன் நிற்பவர்கள் இவ்வூரவர்களே.

அதனை மெய்ப்பிக்கும் வகையில் இணுவிலின் காரைக்கால் சிவன் கோவில் பகுதியில் அண்மையில் கேணி அமைக்க முயன்றபொழுது சிக்கிய கட்ட எச்சங்களும் தொல்பொருட்களும் அமைந்துள்ளன.

பல்லவர்களாலும் சோழர்களாலும் பராமரிக்கப்பட்ட பல்லாயிரம் ஆண்டு கடந்த காரைக்கால் சிவன் கோவில் வளாகத்திலேயே இத் தொல்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. இக்கோவில் பகுதி சித்தர்கள் வாழும் பகுதி எனப்படும். 

அந்தப் பகுதிக்குள் நுழைகின்ற போதே ஒரு பரவச நிலையையும் மன அமைதியும் ஒட்டிக்கொள்ளும். பல அற்புதங்களை நிகழ்த்திய அப் பகுதி இன்று பல அற்புதங்களை வெளிக்கொணரும் பகுதியாக ஈழத்தமிழர்களின் தொன்மத்தை மீட்கும் பகுதியாக அமைந்துள்ளது.

இந்த பகுதி என் தந்தை மற்றும் தாயார் வழி மூதாதைகள் பிறந்து வளர்ந்த பகுதி என்பதிலும் நாம் சிறுவயதில் உருண்டு புரண்ட பகுதிகள் என்பதிலும் பெருமையும் மகிழ்வும். 

#இணுவையூரான்

https://youtu.be/4O8V3tFn9GQ 

No comments:

Post a Comment

தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.