Pages

November 22, 2022

கண்டனக்கவி

(சுவிற்சர்லாந்தில் வாழும் கவிஞர் 

ஒருவரின் அரங்க வெளிப்படுத்தலுக்கான என் பதில்.

இதனை சொல்லாது போனால் அவர் கூற்றுக்கு அங்கிருந்த நானும் துணையானவனாவேன்.)


அத்தனையும் முடிந்தது  என்ற பொழுதில்

விட்டு விட்டு ஓடியவரே

நீங்கள் 

பட்ட கடனும் சேர்த்து

படாத பாடு பட்டு

வட்டியோடு கட்டி வைத்தவர்கள் அவர்கள்

சரி் பிழை உண்டென்றாலும்

சகதியை வாரி இறைக்கும் உரிமை உமக்கில்லை

வாய் உள்ளது என்பதற்காகவும்

வல்ல தமிழ் துணை உள்ளது என்பதற்காகவும்

வசை பாடி விட்டு நீர் செல்ல  

கேட்டு கைதட்டி குதூகலித்து

வாய் மூடி இருப்பதற்கு நானும் 

மற்றவர் போல் அல்ல

புவிப் பந்தில் எனக்கும் அடையாளம் தந்தவன்

உமக்கு அடையாளம் தந்த அதே

பு லித்தாய் கருச் சுமந்து புறம் தள்ளியவன்தான்

விழி் நிமிர்த்தி பார்த்தோம் உங்களை - உங்கள்

வழி மீது தடம் பதித்தும் நடந்தோம்

வீணானவர்கள் நீங்கள் என்று நாம் 

எண்ணும் வகையில்

விடங்களை மனங்களில் பரவி விடாதீர்

வீணான வார்த்தைகளால் கல்லெறிந்து

மீண்டும் மீண்டும் குளங்களை குழப்பாதீர்

சீ இவர்கள் சில்லறைகள் என்று

உமை நோக்கி வாய் உமிழ வைத்துவிடாதீர்

பொது எதிரியை கை விட்டு விட்டு

கூடித் திரிந்தவனுக்கு சாபமிடாதீர்

அந்த அரங்கிலே பதில் சொல்லும் 

திடம் எனக்கு இருந்தாலும்

அரங்கை காக்கும் பொறுப்பு என் 

கரங்களில் இருந்ததால்

நாவடக்கிக் கொண்டேன்.

உடைத்தெறிவது சுலபம்

உருவாக்கி எடுப்பதுவே கடினம்

வல்லமை உண்டெனில் வாய் வீரம் காட்டாமல்

செயல் வீரராய் வாருங்கள்

சேர்ந்து வடம் பிடிப்போம்


#ஈழத்துப்பித்தன்

21.11.2022

No comments:

Post a Comment

தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.